உள்ளாட்சித் தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு: இன்று மேல்முறையீடு செய்கிறது தமிழக அரசு

சென்னை: உள்ளாட்சித் தேர்தலை ரத்து செய்து உயர்நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு இன்று மேல்முறையீடு செய்ய உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவசரகதியில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பு ஆணை வெளியிடப்பட்டதை எதிர்த்து, இடஒதுக்கீடு முறையாக பின்பற்றவில்லை என கூறியும் திமுக தொடர்ந்த வழக்கை விசாரித்த சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி கிருபாகரன், தேர்தலை ரத்து செய்து உத்தரவிட்டார். புதிதாக அறிவிப்பு ஆணை வெளியிட்டு டிசம்பர் 31ம் தேதிக்குள் உள்ளாட்சித் தேர்தலை நடத்தவும் நீதிபதி ஆணையிட்டார்.

உயர்நீதிமன்ற உத்தரவால் எற்கனவே அறிவிக்கப்பட்டபடி வரும் 17 மற்றும் 19ம் தேதிகளில் உள்ளாட்சித் தேர்தலை நடத்த முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து உடனடியாக உயர்நீதிமன்ற உத்தரவை எதிர்த்து மேல்முறையீடு செய்ய மாநில தேர்தல் ஆணையம் மற்றும் தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. அதன்படி இன்றே சென்னை உயர்நீதிமன்றத்தில் 2 நீதிபதிகள் அமர்வில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்படும் என தகவல் வெளியாகியுள்ளது. அதே நேரத்தில் தங்களது தரப்பு வாதத்தை கேட்ட பிறகே மேல்முறையீட்டு மனு மீது எந்த உத்தரவையும் பிறப்பிக்க வேண்டும் என கோரி திமுக சார்பிலும் மனு தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

Newsletter

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...

விஷு பண்டிகைக்கு கோவையில் இருந்து 5 நாட்களில் 15 டன் காய்கறி,பழங்கள் ஷார்ஜாவுக்கு ஏற்றுமதி

மலையாள புத்தாண்டு விஷு பண்டிகை முன்னிட்டு கோவை விமான நிலையத்திலிருந்து கடந்த 5 நாட்களில் 15 டன் எடை கொண்ட காய்கறிகள் மற்...