பழங்குடி மக்களின் நிலத்தை மீட்க கோரி ஆர்ப்பாட்டம்

பழங்குடி மக்களுக்களின் நிலத்தை அபகரித்த அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். என ஆலந்துரை அடுத்த இக்கரை போலுவாம்பட்டியைச் சேர்ந்த கிராமத்து மக்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.




கோவை, ஆலந்துரை அடுத்த இக்கரை போலுவாம்பட்டி கிராமத்தில் அரசுக்கு சொந்தமாக 43 ஏக்கர் நிலம் உள்ளது. இது பழங்குடி மக்களுக்காக ஒதுக்கப்பட்டது என்றும், நிலத்தை ஈஷா யோகாவினர் அபகரித்ததாகவும் புகார் எழுந்துள்ளது. இதற்கு நடவடிக்கை எடுக்க கோரி அக்கிராமத்தை சேர்ந்த100க்கும் மேற்பட்டோர் , கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். 



இது குறித்து வழக்கறிஞர் பன்னீர் செல்வம் செய்துயாளர்களிடம் பேசுகையில் :- 
அரசுக்கு சொந்தமான 43 ஏக்கர் நிலம் பழங்குடி மக்களுக்காக ஒதுக்கப்பட்டிருந்தது. இதை ஈஷா யோகா அமைப்பை சேர்ந்தவர்கள் அபகரிப்பதாக மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக, எழுத்து பூர்வமாக நாங்கள் இனி அந்த நிலத்தை உபயோகிக்க மாட்டோம் என்று அந்த அமைப்பினர் எழுதி கொடுத்தனர். ஆனல் தற்போது, அங்கு கட்டிடங்களை அனுமதியின்றி கட்டி வருகின்றனர். பழங்குடி மக்களுக்கான அரசு ஒதுக்கப்பட்ட நிலத்தை அபகரித்து தனியாருக்கு கொடுத்த அரசு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், ஒரு குடும்பத்துக்கு 2 செண்ட் இடம் என்று பிரித்து கொடுக்க வேண்டும் என அவர் கூறினார்.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...