பாகிஸ்தானுக்கு காய்கறி சப்ளை இல்லை: குஜராத் வியாபாரிகள் முடிவு

ஆமதாபாத் : இந்தியா - பாகிஸ்தான் எல்லையில் பதற்றம் அதிகரித்திருப்பதை அடுத்து, பாக்.,க்கு காய்கறி சப்ளை செய்வதை நிறுத்த குஜராத் வியாபாரிகள் முடிவு செய்துள்ளனர். குறிப்பாக தக்காளி, மிளகாய் உள்ளிட்ட பொருட்களின் சப்ளையை நிறுத்தி உள்ளனர். இதனால் குஜராத் விவசாயிகள் மற்றும் காய்கறி வியாபாரிகளுக்கு தினமும் சுமார் ரூ.3 கோடி அளவிற்கு வர்த்தகம் பாதிக்கப்பட்டுள்ளது. பாக்.,க்கு காய்கறி சப்ளை நிறுத்தப்பட்டது உள்ளது குறித்து ஆமதாபாத் காய்கறி முகவர் சங்க பொதுச் செயலாளர் அகமது பட்டேல் கூறுகையில், குஜராத்தில் இருந்து தினமும் 50 டிரக்களில் 10 டன் காய்கறிகள் வாகா எல்லை வழியாக பாகிஸ்தானுக்கு செல்கிறது. தற்போது இருநாட்டு பதற்றம் காரணமாக கடந்த இரண்டு நாட்களாக காய்கறிகள் நிறுத்தப்பட்டுள்ளது. 1997க்கு பிறகு முதல் முறையாக தற்போது தான் பாக்.,க்கு காய்கறி சப்ளை நிறுத்தப்பட்டுள்ளது. இரு நாட்டு உறவுகளும், நிலைமையும் சரியாகும் வரை காய்கறி சப்ளை நிறுத்தப்பட்டு இருக்கும் என்றார். இதனால் வியாபாரிகளுக்கு தினமும் ரூ.3 கோடி இழப்பு ஏற்படும். ஆனால் நாட்டு நலனை விட தனிமனித நலன் பெரிதல்ல. வங்கதேசம், வளைகுடா நாடுகள், கனடா, தென்னாப்பிரிக்கா நாடுகளுக்கு வழக்கம் போல் காய்கறிகள் அனுப்பப்படும். 

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...