கர்நாடக அணைகளில் 2வது நாளாக ஆய்வு

பெங்களூரு : கர்நாடக அணைகளை காவிரி உயர்மட்ட தொழில்நுட்ப குழு 2-வது நாளாக இன்று ஆய்வு செய்கிறது. ஹெலிகாப்டர் மூலம் நேற்று மாண்டியா மாவட்டம் சென்ற நிபுணர் குழுவினர், ஹம்ரஅல்லி மற்றும் தைலுரு ஏரிகளை ஆய்வு செய்தனர். ஆணைத்தொட்டி, ஆவேரிப்பள்ளி கிராமங்கள் மற்றும் மாலவல்லி தாலுக்காவில் காவிரி நீர் பாசனப்பகுதிகளை அவர்கள் பார்வையிட்டனர். இந்நிலையில் கே.ஆர்.எஸ்., கபினி, ஹேமாவதி, ஹாரங்கி ஆகிய அணைகளை அந்த குழு இன்று ஆய்வு செய்கிறது. தொழில்நுட்ப குழுவினர் இன்று இரவு மேட்டூர் வருகின்றனர். மேட்டூர் அணை மற்றும் நீர் பிடிப்பு பகுதிகளை அவர்கள் நாளை ஆய்வு செய்யலாம் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது. தொழில்நுட்ப குழு, காவிரி நீர்பிடிப்பு பகுதிகள், மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு, நீர் திறப்பது மற்றும் நீர் இருப்பு ஆகியவற்றை நாளை ஆய்வு செய்ய உள்ளது. உச்சநீதிமன்ற உத்தரவுப்படி காவிரி பாசனப்பகுதிகள் மற்றும் அணைகளை ஆய்வு செய்வதற்காக மத்திய நீர்வளத்துறை ஆணையர் ஜி. எஸ். ஷா தலைமையில் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த குழுவின் அறிக்கை வரும் 17-ம் தேதி உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யபட உள்ளது.  

Newsletter

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி பொள்ளாச்சி வேட்பாளருக்கு கட்சிப் பெயரே பயன்படுத்த முடியாத நிலை - அண்ணாமலை விமர்சனம்

பொள்ளாச்சி சட்டமன்றத் தொகுதியில் அதிமுக வேட்பாளர் பொள்ளாச்சி ஜெயராமனை ஆதரித்து நடைபெற்ற தேர்தல் பிரச்சார பொதுக்கூட்டத்தி...

பொள்ளாச்சியில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் கலந்துரையாடல்

பொள்ளாச்சி வாணியர் சேவா சங்க வளாகத்தில் கூட்டணி வேட்பாளர் நித்யானந்தன் பொதுமக்களுடன் சிறப்பு கலந்துரையாடல் நடத்தினார். ப...

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...