கோவையில் நடைபெற்ற வன்முறையில் மக்கள் பீதியில் உள்ளனர் - கள ஆய்வில் தகவல்

கோவையில் நடைபெற்ற வன்முறையின்  காரணமாக மக்கள் தற்போது அச்சத்தில் உள்ளதாக, கள ஆய்வில் ஈடுபட்டுள்ள மக்கள் சிவில் உரிமை கழகம் சார்பாக அமைக்கப்பட்ட உண்மையை கண்டறியும் குழுவினர் தெரிவித்துள்ளனர். 

கோவையில் கடந்த 22 ஆம் தேதி இந்து முன்னணி செய்தி தொடர்பாளர் சசி குமார் மர்ம நபர்களால் வெட்டி படுகொலை செய்யப்பட்டார். இதனையடுத்து நடைபெற்ற இறுதி ஊர்வளத்தில் கோவையில் பல்வேறு வன்முறை வெடித்தது. இதில் வனிக வளாகங்கள், நிறுவனங்கள், சாலையில் நிறுத்தி வைக்கப்பட்ட வாகனங்கள் மற்றும் பேருந்துகள் அடித்து நொருக்கப்பட்டன. துடியலூர் பகுதில்  காவல்துறை வாகனம் மற்றும் இரு கடைகளும் தீ வைக்கப்பட்டது. இந்த வன்முறை தொடர்பாக 400க்கும் மேற்பட்டோரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

இந்நிலையில் இந்த கலவரம் இயல்பாக தோன்றியதா அல்லது திட்டமிடப்பட்டு நடத்தப்பட்டதா என்ற உண்மையை கண்டறிய மக்கள் சிவில் உரிமை கழகம் சார்பாக 18 பேர் கொண்ட குழு கோவையில் கள ஆய்வில் ஈடுபட்டுள்ளனர். இந்த குழுவில் காந்திகிராம் பல்கலைகழக முன்னாள் துணை வேந்தர் மார்கண்டன், தமிழ் தேசிய விடுதலை இயக்கம் தியாகு,தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி பொது செயலாளர் சமுவேல் ராஜா, வழக்கறிஞர்கள், மற்றும் பல்வேறு சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டுள்ளனர். இதில் கலவரத்திற்கான காரணம் மற்றும் அதனை காவல்துறை தடுக்க தவறியது குறித்தும், மக்களிடம் ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும் அப்பகுதி மக்களை சந்தித்தி ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். அப்போது பேசிய மக்கள் சிவில் உரிமை கழகத்தின் மாநில பொது செயலாளரும் உண்மை கண்டறியும் குழுவின் ஒருங்கிணைப்பாளர் முரளி, வன்முறை சம்பவம் காரணமாக மக்கள் மனதில் தற்போது அச்சம் உள்ளதாகவும், இதில் இருந்து மக்களை மீட்டெடுக்க மக்கள் இயக்கங்கள் முன்வர வேண்டும் என வலியுறுத்தினர்.

பெரும்பாலான இளைஞர்களே இந்த வன்முறையில் ஈடுபட்டு உள்ளதாகவும், இது திட்டமிட்டு நடத்தப்பட்ட வன்முறையாகவே தோன்றுவதாகவும் அவர் தெரிவித்தார்.இரண்டு நாட்கள் நடைபெற உள்ள இந்த ஆய்வின் முடிவில் அறிக்கை தயார் செய்து அரசிடம் ஒப்படைக்க உள்ளதோடு இது போன்ற சம்பவங்கள் நடைபெறாமல் தடுக்க மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து ஆலோசனைகளும் அறிவுறுத்தப்பட உள்ளதாக தெரிவித்தார். சசி குமார் கொலை சம்பவம் தொடர்பாக திருப்பூரில் நடைபெற்ற பந்த் குறித்தும் மக்கள் சிவில் உரிமை கலகத்தினர் நேற்று ஆய்வு மேற்கொண்டது குறிப்பிடதக்கது.

Newsletter

கோவை காவல்துறை கான்ஸ்டபிள் மாநில போட்டியில் தங்கத்துக்குப் பின் வெண்கலம் வென்றார்

கோவை நகர காவல்துறை வெடிகுண்டு கண்டறிதல் மற்றும் அகற்றும் படையைச் சேர்ந்த காவல் கான்ஸ்டபிள் M. விஜய், செப்டம்பர் 10ஆம் தே...

Coimbatore Police Constable Adds Bronze After Gold at State-Level Competition

Police Constable M. Vijay of the Coimbatore City Police Bomb Detection and Disposal Squad (BDDS), who won gold in the Ro...

வால்பாறையில் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை; அனைத்துக் கட்சியினரும் மலரஞ்சலி

வால்பாறையில் சுதந்திரப் போராட்டத் தியாகி இமானுவேல் சேகரனாரின் 69-வது குருபூஜை விழா கோலாகலமாக நடைபெற்றது. அனைத்துக் கட்சி...

கோவையில் வளர்ச்சித் திட்டப் பணிகள் குறித்து அமைச்சர் வே சம்பத்குமார் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சியில் நடைபெற்று வரும் சாலை பணிகள், நமக்கு நாமே திட்டம், அம்ருத் திட்டப் பணிகள் ஆகியவற்றை பிற்படுத...

கோவையில் விபத்தில் மூளைச்சாவடைந்த நபரின் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு

கோவையில் துடியலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த 51 வயது நபரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அவரது குடு...

கோவையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தலைமையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக்...