தனியார் கொரியர் நிறுவனத்தில் ஊழியரை கட்டிவைத்து கொள்ளை

கோவை உக்கடம் புறவழிச்சாலையில் தனியாருக்கு சொந்தமான கொரியர் நிறுவனம் உள்ளது. இந்த கொரியர் நிறுவனம் உள்நாடு மட்டுமின்றி வெளிநாடுகளுக்கும் கொரியர் சர்வீஸ் செய்து வருகின்றது. இந்நிறுவனத்தில் இரண்டு ஊழியர்கள் இரவு நேரத்தில் பணியாற்றி இருந்தனர், அப்போது ஒரு ஊழியர் வெளியே சென்றதாக கூறப்படுகின்றது. அப்போது நள்ளிரவில் அங்கு வந்த மர்ம நபர்கள் திடீரென அங்கிருந்த கொரியர் ஊழியரை பிடித்து தாக்கி கட்டிவைத்து, அங்கு உள்ள கல்லா பெட்டியில் இருந்து ரூ.9.50லட்சம் ரொக்கப்பணத்தை கொள்ளையடித்து சென்றனர். 



இதுகுறித்து, அந்நிறுவளத்தின் மேலாளர் பாலாஜி போலீசில் புகார் அளித்துள்ளார். அந்த ஊழியர் கொடுத்த தகவலின் பேரில் புலியகுளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். காவல்துறை துணை ஆணையாளர் லட்சுமி சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினார்.



மேலும், கைரேகை நிபுணர்கள் வந்து கைரேகைகளை பதிவு செய்தனர். மேலும், கொரியர் நிறுவனத்தில் இருந்த சிசிடிவி காமெராவின் பதிவுகளை கைப்பற்றி விசாரணை நடத்தி வருகின்றனர். கோவையில் கொரியர் நிறுவனத்தில் ஊழியரை கட்டிப்போட்டு கொள்ளை சம்பவம் நடைபெற்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...