சர்வதேச பேரிட இன்னல் குறைப்பு தின விழிப்புணர்வு பேரணி

கோயம்புத்தூர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்று சர்வதேச பேரிட இன்னல் குறைப்பு தினத்தை முன்னிட்டு விழிப்புணர்வு பேரணியை மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் அவர்கள் தொடங்கி வைத்து பேரணியில் கலந்து கொண்டார். இப்பேரணியில் சுமார் 500-க்கு மேற்பட்ட பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டு பேரிட இன்னல் குறைப்பு குறித்த விழிப்புணர்வு பதாதைகள் ஏந்தி பொதுமக்கள் பார்த்து விழிப்புணர்வு பெரும் விதமாக நகரின் முக்கிய வீதி வழியாக சென்று வ.உ.சி மைதானத்தை சென்றடைந்தனர்.

இது குறித்து மாவட்ட ஆட்சித்தலைவர் பேசுகையில்:
ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 13-ஆம் நாள் சர்வதேச பேரிட இன்னல் குறைப்பு தினம் கடைபிடிக்கப்படுகிறது. வெள்ளப்பெருக்கு, நிலச்சரிவு, தீயில் இருந்து பாதுகாத்துகொள்ளுதல் ஆகிய சம்பங்களிலிருந்து பொதுமக்கள் எந்தவித பாதிப்புமின்றி தங்களை காத்துக்கொள்வதே இதன் நோக்கமாகும். வடகிழக்கு பருவமழை காலம் துவங்கியதையொட்டி மாவட்டத்தில் எவ்வித பாதிப்புகள் வராத வண்ணம் முழுமையாக கண்காணித்து தாழ்வான பகுதிகளில் தண்ணீர் தங்குவதை முன் கூட்டியே தெரிந்து தண்ணீர் தேங்காமல் உடனுக்குடன் வடிந்திடும் அளவிற்கு வாய்க்கால் பகுதிகளை சீர் செய்து தயார் நிலையில் வைத்துக்கொள்ளும் வகையிலும் மற்றும் பொதுமக்கள் மழைக்காலங்களில் காய்ச்சிய குடிதண்ணீரை பயன்படுத்தி எல்லோரும் சுகாதாரத்தை பாதுகாத்திடவும் மேலும் பொதுமக்கள் அனைவரும் பேரிடர் காலங்களில் தன்னைத்தானே காத்துக்கொள்வது மட்டுமின்றி குழந்தைகள், முதியோர்கள் ஆகியோரை எந்தவித பாதிப்புமின்றி பாதுகாத்தல் போன்ற விழிப்புணர்வுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என மாவட்ட ஆட்சித்தலைவர் ஹரிஹரன் அவர்கள் தெரிவித்தார். 

இப்பேரணியில் மாவட்ட வருவாய் அலுவலர் கிருஸ்துராஜ், பயிற்சி ஆட்சியர் பிரியங்கா, ஊரக வளர்ச்சி முகமை திட்ட இயக்குநர் ரூபன்சங்கர்ராஜ், வருவாய் கோட்டாட்சியர் சுரேஷ், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (பொது)சிதம்பரம் ஆகியோர் உட்பட அரசு அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...