பெட்ரோல் நிலையங்கள் விற்பனை நிறுத்தப் போராட்டம் அறிவிப்பு


விற்பனை விளிம்புத் தொகையை உயர்த்தக் கோரி, பெட்ரோல் நிலையங்களில் விற்பனை நிறுத்தப் போராட்டம் நடைபெறும் என பெட்ரோலிய விற்பனையாளர்கள் சங்கம் அறிவித்துள்ளது.

இதுகுறித்து சங்கத்தின் மாநிலத் தலைவர் கே.முரளி கடலூரில் வியாழக்கிழமை கூறியது:

இந்திய பெட்ரோலிய நிறுவனங்கள் அதன் முகவர்களுக்கு விற்பனை விளிம்புத் தொகையை உயர்த்தி வழங்கவில்லை. இதனால், எங்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படுகிறது. இதையொட்டி, நாடு தழுவிய போராட்டம் நடத்த முடிவு செய்துள்ளோம்.

அதன்படி, வருகிற 19 மற்றும் 26 ஆகிய தேதிகளில் இரவு 7 மணி முதல் 7.15 மணி வரை பெட்ரோல் விற்பனை நிலையங்களில் விளக்குகளை அணைத்து விற்பனை நிறுத்தப் போராட்டம் நடைபெறும். இதையடுத்து, நவம்பர் 3, 4ஆம் தேதிகளில் எண்ணெய் நிறுவனங்களிலிருந்து தொடர் கொள்முதல் நிறுத்தப் போராட்டம் நடைபெறும்.

அதைத்தொடர்ந்து, மாதத்தில் 2 மற்றும் 4ஆவது சனிக்கிழமைகளில் பெட்ரோலிய பொருள்களின் விற்பனை நிறுத்தப்படும். நவம்பர் 5 ஆம் தேதி முதல் விற்பனை நிலையங்கள் காலை 9 மணி முதல் மாலை 6 மணி வரை மட்டுமே செயல்படும். விற்பனை நிலையங்களில் அமைந்துள்ள எண்ணெய் நிறுவனங்களின் சின்னங்களில் உள்ள விளக்குகள் நவம்பர் 5ஆம் தேதி முதல் அணைக்கப்படும்.

ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையும் விற்பனை நிலையங்களில் விற்பனை நிறுத்தப்படும். தமிழகம், புதுவையில் 4,500 பெட்ரோல் நிலையங்கள் உள்ளன. அனைத்து பெட்ரோல் நிலையங்களிலும் இந்தப் போராட்டம் நடைபெறும் என்றார் அவர்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...