முதல்வர் குறித்து அவதூறு- நீதிமன்றக் காவலில் வங்கி ஊழியர்கள்



முதல்வர் குறித்து அவதூரான தகவல்களை பரப்பியதாக கோவையில் வங்கி ஊழியர்கள் இருவர் கைது செய்யப்பட்டு நீதிமன்றக் காவலில் அடைக்கப்பட்டுள்ளனர். 

கோவை, தொண்டாமுத்தூர் ஐயன் நகர் பகுதியைச் சேர்ந்தவர்கள் ரமேஷ் (49) மற்றும் சுரேஷ் (58). தொண்டாமுத்தூர் பகுதியில் செயல்பட்டுவரும் கனரா வங்கியில் ரமேஷ் எழுத்தாளராகவும், சுரேஷ் தங்க நகை மதிப்பீட்டாளராகவும் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில், கடந்த 7ம் தேதியன்று அதிமுக மகளிர் அணி உறுப்பினரும், உள்ளாட்சித் தேர்தலில் 9வது வார்டில் கவுன்சிலராக போட்டியிடும் புனிதா தேவி மேற்குறிப்பிட்ட வங்கியில் பணம் செலுத்த சென்றுள்ளார். அப்போது, ரமேஷ் மற்றும சுரேஷ் இருவரும் இணைந்து புனிதா தேவியிடம் தமிழக முதல்வர் ஜெயலலிதா குறித்து சர்ச்சைக்குறிய கருத்தினை தெரிவித்துள்ளனர்.

இதனைத்தொடர்ந்து, வியாழனன்று புனிதா தேவி சில அதிமுக உறுப்பினர்களுடன் சென்று ஏன் முதல்வர் குறித்து அவ்வாறு பேசுகிறீர்கள் என கேள்வியெழுப்பியுள்ளார். அப்போதும், இருவரும் முதல்வர் குறித்து அவதூரான கருத்தையே தெரிவித்துள்ளனர். 

இதையடுத்து, புனிதா தேவி காவல் நிலையத்தில் புகார் தெரிவித்ததையடுத்து, தொண்டாமுத்தூர் காவல்துறையினர் வங்கி ஊழியர்கள் ரமேஷ், சுரேஷ் ஆகியோரை வெள்ளியன்று (இன்று) கைது செய்து கோவை ஒருங்கிணைந்த நீதிமன்ற நீதிபதி முன்பு ஆஜர்படுத்தினர். பின் இந்த வழக்கு குறித்து விசாரித்த 6வது நடுவர் நீதிபதி ராஜவேலு, இருவரையும் 12 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்குமாறும், இந்த வழக்கு குறித்தான விசாரணையை வரும் 26ம் தேதிக்கு ஒத்திவைத்தும் உத்தரவிட்டார்.



Newsletter

கோவையில் விபத்தில் மூளைச்சாவடைந்த நபரின் உறுப்புகள் தானம்: 3 பேருக்கு மறுவாழ்வு

கோவையில் துடியலூர் அருகே இருசக்கர வாகன விபத்தில் மூளைச்சாவடைந்த 51 வயது நபரின் கல்லீரல் மற்றும் சிறுநீரகங்கள் அவரது குடு...

கோவையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக் கூட்டம்

கோவை மாநகராட்சி ஆணையர் கட்டா ரவி தேஜா தலைமையில் திடக்கழிவு மேலாண்மை விதிகள் 2026 நடைமுறைப்படுத்தல் குறித்த கலந்தாய்வுக்...

ஜெர்மனியில் 2027ல் நடக்கும் உலோகத் தொழில்நுட்ப கண்காட்சியில் பங்கேற்க அழைப்பு

ஜெர்மனியில் 2027 ஜூன் 21 முதல் 25 வரை The Bright World Of Metals சர்வதேச கண்காட்சி நடக்கிறது. கோவை கொடிசியாவில் நடந்த செ...

Ganja Chocolate Offender Detained Under Goondas Act in Coimbatore

Mossam Kumar, 30, who was arrested for allegedly possessing 5.250 kg of ganja and ganja chocolates for sale in the Maduk...

கோவையில் கஞ்சா விற்பனை செய்த வடமாநில இளைஞர் மீது குண்டர் சட்டம்

கோவை மாவட்டம் மதுக்கரை பகுதியில் 5.250 கிலோ கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட வடமாநிலத்தைச் சேர்ந்த மோசம் குமார் என்பவர் கைது செ...

கிணத்துக்கடவு இளைஞர் கொலை வழக்கில் கைதான மாதேஷ் குண்டர் சட்டத்தில் கைது

பொள்ளாச்சி அருகே சிக்கலாம்பாளையத்தைச் சேர்ந்த 22 வயது இளைஞர் அஸ்வின் கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட 21 வயது மாதேஷை, கோவை...