நாளை துவங்குகிறது பிரிக்ஸ் மாநாடு: பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் முயற்சியில் இந்தியா தீவிரம்

பனாஜி: பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு கோவாவில் நாளை துவங்க உள்ள நிலையில், பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் முயற்சியை இந்தியா மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது. பிரேசில், ரஷ்யா, சீனா, தென்னாப்ரிக்கா, இந்தியா ஆகிய உறுப்பு நாடுகளை கொண்ட பிரிக்ஸ் அமைப்பின் உச்சி மாநாடு, நாளையும் நாளை மறுநாளும் கோவாவில் நடைபெற உள்ளது.  இதில் 4 நாடுகளின் தலைவர்கள் பங்கேற்கின்றனர். உரி தாக்குதலை தொடர்ந்து இஸ்லாமாபாத்தில் நடக்க இருந்த சார்க் மாநாட்டை இந்தியா புறக்கணித்தது. இதனை தொடர்ந்து வங்கதேசம், பூடான், ஆப்கானிஸ்தான், இலங்கை ஆகிய நாடுகளும் சார்க் மாநாட்டை புறகணித்ததால் மாநாடு தள்ளிவைக்கப்பட்டது.

சர்வதேச நாடுகளின் மத்தியில் பாகிஸ்தானை தனிமைப்படுத்தும் நடவடிக்கையின் ஒருகட்டத்தை இந்த பிரிக்ஸ் உச்சிமாநாட்டின் மூலம் இந்தியா பயன்படுத்திக் கொள்ளும் என எதிர்பாரக்கப்படுகிறது. பல ஆயிரம் கோடி ரூபாய்க்கு ரஷ்யாவிடம் ஏவுகணை வாங்குவதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட உள்ளது. மேலும் கூடங்குளம் 3 மற்றம் 4-வது அணுஉலை திட்டமும் துவங்கப்பட உள்ளது.

மேலும் இருநாடுகளுக்கிடையே பல்வேறு ஒப்பந்தங்களும் கையெழுத்தாக உள்ளன. இதை தவிர சீனா உள்ளிட்ட நாடுகளுடன் நல்லுறவை வலுப்படுத்தவும் இந்த மாநாட்டை இந்தியா பயன்படுத்திக் கொள்ளும் என அரசு வட்டாரங்கள் தகவல் தெரிவித்துள்ளன,

Newsletter

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...

“இபிஎஸ், வேலுமணி மக்கள் தீர்ப்பை சந்திப்பார்கள்” - கோவையில் செங்கோட்டையன் கடும் விமர்சனம்..!

கோவை தெற்கு தொகுதியில் தவெக வேட்பாளர் செந்தில்குமாரை ஆதரித்து பிரச்சாரம் மேற்கொண்ட தவெக நிர்வாகி செங்கோட்டையன், எடப்பாடி...