காமன்வெல்த் அமைப்பிலிருந்து மாலத்தீவு விலகல்

காமன்வெல்த் அமைப்பிலிருந்து விலகுவதாக, மாலத்தீவு அறிவித்துள்ளது.

தெற்காசிய நாடான மாலத்தீவில், ஜனநாயக முறைப்படி தேர்ந்தெடுக்கப்பட்ட அதிபராக, முகமது நஷீத் இருந்தார். 2012ல், முகமது நஷீத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்டு, அப்துல்லா யாமீன், அதிபராக பதவியேற்றார். 'நஷீத்தின் ஆட்சி கவிழ்க்கப்பட்டது, ஜனநாயக படுகொலை' என, சர்வதேச நாடுகள் குற்றம்சாட்டின. மாலத்தீவில், மனித உரிமை மீறல்கள் அதிகம் நடப்பதாகவும் குற்றம்சாட்டப்பட்டது. இதுகுறித்து விளக்கம் கேட்டு, மாலத்தீவு அரசுக்கு, காமன்வெல்த் அமைப்பு சார்பில் நோட்டீஸ் அனுப்பப்பட்டது.

இந்நிலையில், மாலத்தீவு வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: முகமது நஷீத்தின் ஆட்சி நீக்கப்பட்டதிலிருந்தே, மாலத்தீவை, காமன்வெல்த் அமைப்பு அவமானப்படுத்தி வருகிறது. மாலத்தீவில் ஜனநாயகம் இல்லை என்பது போன்ற பொய் பிரசாரத்தை செய்து வருகிறது. அதனால், காமன்வெல்த் அமைப்பில் தொடர்ந்து நீடிப்பது நல்லதல்ல என்பதால், அதிலிருந்து விலக முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. 

Newsletter

கோவை வடக்கில் மத்திய இணை அமைச்சர் சுரேஷ் கோபி பிரசாரம்; மலையாளி வாக்காளர்களிடம் வானதி சீனிவாசனுக்கு ஆதரவு கோரல்

கோவை வடக்கு தொகுதியில் ஈழுவ சமுதாய மக்களின் ஆலோசனைக் கூட்டத்தில் மத்திய இணை அமைச்சர் நடிகர் சுரேஷ் கோபி கலந்துகொண்டு NDA...

கவுண்டம்பாளையத்தில் டோக்கன் விநியோகம் சர்ச்சை: அதிமுகவினரிடம் இருந்து டோக்கன்கள் பறிமுதல்; வீடியோ வைரல்..!

கவுண்டம்பாளையம் தொகுதிக்குட்பட்ட துடியலூர் ரங்கம்மாள் காலனியில், எடப்பாடி பழனிச்சாமி புகைப்படத்துடன் கூடிய ரூ.10,000 மற்...

கோவை ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாட்டம்

கோவை வட்டமலைபாளையத்தில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா பொறியியல் கல்லூரியில் 32வது ஆண்டு விழா கொண்டாடப்பட்டது. முன்னாள் DGP சைலேந...

“தப்பாட்டம் என்கிட்ட ஆடாதே….”- திருப்பூரில் முதல்வர் மு.க ஸ்டாலின் பரப்புரை..!

திருப்பூர் மாவட்டத்தில் போட்டியிடும் திமுக மற்றும் கூட்டணிக் கட்சி வேட்பாளர்களுக்கு ஆதரவாக பிரச்சார கூட்டத்தில் கலந்து க...

பிரதமர் மோடி கோவை வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம், 3,000 போலீசார் குவிப்பு..!

தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு ஆதரவாக இன்று மாலை கோவை கொடிசியா மைதானத்தில் நடைபெறும் பிரம்மாண்ட பொதுக்கூட்டத்தில்...

கொடீசியாவில் இன்று மோடி-எடப்பாடி பழனிசாமி பிரம்மாண்ட பொதுக்கூட்டம்

கோயம்புத்தூர் கொடீசியா மைதானத்தில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடி மற்றும் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி பங்க...