என்எஸ்ஜி குரூப், மசூத் அசார் விவகாரம் சீனாவின் நிலையில் மாற்றம் இல்லை: வெளியுறவுத்துறை அமைச்சகம் அறிவிப்பு

என்எஸ்ஜி குழுவில் இந்தியா சேர எதிர்ப்பு தெரிவித்ததற்கும், மசூத் அசாரை ஐநாவால் தடை செய்யப்பட்ட தீவிரவாதி என அறிவிப்பதற்கும் எதிர்ப்பு தெரிவித்த சீனாவின் நிலையில் எந்த மாற்றமும் இல்லை என்று வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.பிரிக்ஸ் மாநாட்டில் பங்கேற்ற சீன அதிபர் ஜி ஜின்பிங் இன்று இந்தியா வர உள்ளார். இந்த சூழ்நிலையில் அணுசப்ளை செய்யும் குழுவில் இந்தியா சேர எதிர்ப்பு தெரிவித்தது, ஜெய்ஷ் இ முகமது தீவிரவாத இயக்க தலைவர் மசூத் அசாரை ஐநாவால் அங்கீரிக்கப்பட்ட தீவிரவாதி என்ற அறிவிப்பை வெளியிட முயற்சி செய்த இந்தியாவின் நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்தது போன்ற சீனாவின் நிலையில் மாற்றம் உண்டா என்ற கேள்வி எழுப்பப்பட்டது. இதற்கு சீன வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர் ஜெங் ஜங் பதில் அளித்து கூறியதாவது:இந்தியா மற்றும் சீனா இடையிலான உறவு மிகவும் முன்னேற்றம் அடைந்து வருகிறது.

அதேசமயம் அணுசப்ளை செய்யும் குழுவில் இந்தியாவை சேர்ப்பது, மசூத் அசாருக்கு தடை விதிப்பது போன்ற விவகாரங்களில் சீனாவின் நிலையில் எந்தவித மாற்றமும் இல்லை. நான் சீனாவின் நிலையைப்பற்றித்தான் எடுத்துக்கூறமுடியும். இருப்பினும் எதிர்காலத்தில் இருநாட்டு பிரச்னை குறித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்க்க முடியும் என்ற நம்பிக்கை உள்ளது. பாகிஸ்தான் ஆக்ரமிப்பு காஷ்மீர் வழியாக சீனா-பாகிஸ்தான் இடையிலே பொருளாதார மண்டலம் அமைப்பது குறித்து இருநாடுகள் இடையேயும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது.இவ்வாறு அவர் தெரிவித்தார்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...