'உடனடியாக தற்காலிக உரிமம் வழங்க வேண்டும்' - கோவை மாவட்ட பட்டாசு விற்பனை சிறு வியாபாரிகள் கோரிக்கை

தீபாவளிக்கு இரண்டு வாரங்களே உள்ள நிலையில் இதுவரை  பட்டாசு  கடை வைக்க  மாவட்ட நிர்வாகம் தற்காலி உரிமம் வழங்காத்தால்  பட்டாசு கொள்முதல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக பட்டாசு வியாபாரிகள் குற்றம்சாட்டி உள்ளனர். 

கோவை மாவட்ட  பட்டாசு விற்பனை சிறு வியாபாரிகள்  சங்கத்தின் கூட்டம் இன்று நடைபெற்றது. இது தொடர்பாக பேசிய அச்சங்கத்தின் பொது செயலாளர்,  தீபாவளியை முன்னிட்டு தற்காலிகமாக பட்டாசு விற்பனைகள் நடைபெறும் , இதுபோன்று  பட்டாசு விற்னை செய்யும் கடைகளுக்கு 30 நாட்களுக்கு முன்பாகவே  தற்காலிக உரிமம் வழங்க வேண்டும் என மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.  ஆனால் தீபாவளிக்கு  இரண்டு வாரங்களே உள்ள நிலையிலும் பட்டாசு கடை வைக்க மாவட்ட நிர்வாகம் தற்காலிக உரிமம் வழங்காமல் தாமதித்து வருவதாக குற்றம்சாட்டினார். இதானல் பட்டாசு கொள்முதல் செய்து சுமூகமாக வியாபாரம் செய்வதில் சிக்கல் ஏற்படுவதாக தெரிவித்தவர், உடனடியாக மாவட்ட நிர்வாகம்  தற்காலிக உரிமம் வழங்க  உடனடியாக நடவடிக்கை எடுக்க கோரி தீர்மானம் நிறைவேற்றி இருப்பதாக தெரிவித்தார். மேலும் தற்காலிக பட்டாசு கடைகள் அமைக்க வணிக வரித்துறையினர் நெருக்கடி இன்றி எளிய முறையில் வணிக வரி உரிமம் கிடைகக் வழி செய்ய வேண்டும் எனவும்  சீன பட்டாசுகளை தவிர்த்து தரமான பட்டாசுகளை பாதுகாப்பான முறையில் விற்பனை செய்யவும் தீர்மானம் நிறைவேற்றி உள்ளனர். இந்த கோரிக்கைகள் தொடர்பாக நாளை மாவட்ட ஆட்சியரை சந்திக்க உள்ளனர். 

Newsletter

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...

“பிரதமரின் உரை எனக்குப் புதிய தெம்பைக் கொடுத்து உள்ளது” – மருத்துவமனையில் இருந்து வானதி சீனிவாசன் நெகிழ்ச்சி

உடல்நலக்குறைவால் கடந்த சில நாட்களாகத் தேர்தல் களத்தில் இருந்து தற்காலிகமாக விலகி சிகிச்சை பெற்று வரும் வானதி சீனிவாசன்,...