சட்டமன்ற தேர்தலின் போது ஓட்டுக்கு பணம் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கவில்லை-தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவன்



சட்டமன்ற தேர்தலின் போது ஓட்டுக்கு பணம் கொடுத்தவர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் இடைத்தேர்தல் அறிவிக்கப்படுள்ளதாக தமிழ்நாடு காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ் இளங்கோவான் குற்றம்சாட்டியுள்ளார்.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த அவர் இவ்வாறு தெரிவித்தார். டெல்லியில் காங்கிரஸ் கட்சியின் துணை தலைவர் ராகுல் காந்தியை சந்தித்த போது தமிழக இடைத்தேர்தலில் திமுக போட்டியிடும் தொகுதிகளில் வெற்றிக்காக காங்கிரஸ் தொண்டர்கள் உழைக்க வேண்டும் என ராகுல் அறிவுறுத்தியதாக தெரிவித்த அவர் உள்ளாட்சி தேர்தலிலும் திமுகவுடன் கூட்டணி தொடரும் என நம்பிக்கை தெரிவித்தார்.

தற்போதைய தமிழக காங்கிரஸ் தலைவர் திருநாவுக்கரசருடன் சுமூக உறவு உள்ளதாக தெரிவித்த அவர் காங்கிரஸ் கட்சியின் வளர்ச்சி தொடர்பாக தொடர்ந்து அவ்வப்போது கருத்துக்கள் கூறி வருவதாகவும் அவர் அப்போது கூறினார். முதல்வருக்கு சிகிச்சை அளிக்க லண்டன் மருத்துவர் 3 முறை வந்துள்ளது, அவரது உடல்நிலை முன்னேற்றம் அடைந்து வருவதை உணர்த்துவதாக தெரிவித்த அவர் காவிரி மேலாண்மை வாரியம் அமைக்க நடைபெற்ற போராட்டங்களில் காங்கிரஸ் கட்சியினர் இன்னும் அதிக அளவில் கலந்து கொண்டிருக்க வேண்டும் என தாம் கருதுவதாக கருத்து தெரிவித்தார். காங்கிரஸ் கட்சியில் தமக்கு புதிய பதவி அறிவிக்கப்பட்டால் அதனை மகிழ்ச்சியுடன் ஏற்றுக்கொள்வதாகவும் இளங்கோவன் அப்போது தெரிவித்தார்.

Newsletter

கோவையில் செந்தில் பாலாஜிக்கு ஆதரவாக முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப சிதம்பரம் பரப்புரை..!

NDA ஆட்சி அமைந்தால், பீகார் மாநில முதலமைச்சர் நிதிஷ் குமாருக்கு ஏற்பட்ட அரசியல் சூழ்நிலை போன்று தமிழகத்திலும் நிலைமை உரு...

கோவையில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சி தீவிர பிரச்சாரம்

கோவையில் தொண்டாமுத்தூர், தெற்கு, வடக்கு தொகுதிகளில் தேசிய ஜனநாயக கூட்டணி வேட்பாளர்களுக்கு இந்து மக்கள் கட்சியின் மாநில ப...

பீடம்பள்ளி ஊராட்சியில் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் விழா: திமுக செயலாளர் மரியாதை

கோவை தெற்கு மாவட்டம் சூலூர் தெற்கு ஒன்றியத்தின் பீடம்பள்ளி ஊராட்சியில் அண்ணல் அம்பேத்கர் 136-வது பிறந்தநாள் நிகழ்வில் தி...

சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" படம் வெளியீடு – கோவை உள்ளூர் சேனல் உரிமையாளர் கைது

கோவை கருமத்தம்பட்டியில் "ராசி பிரைம் மூவி" சேனல் உரிமையாளர் பழனிச்சாமி (44), மத்திய தணிக்கை சான்றிதழ் பெறாத "ஜனநாயகன்" த...

தவெக தலைவர் விஜய் இன்று கோவை வருகை - திருப்பூர் பெருமாநல்லூரில் தீவிர பிரச்சாரம்

தமிழக சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக தவெக தலைவர் விஜய் இன்று தனி விமானம் மூலம் கோவை வந்து திருப்பூர் பெருமாநல்லூரில்...

தொண்டாமுத்தூரில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக தீவிர வாக்கு சேகரிப்பு பிரசாரம்

தொண்டாமுத்தூர் சட்டமன்ற தொகுதியில் N.R.கார்த்திகேயனுக்கு ஆதரவாக திமுக தலைவர்கள் தீவிர வாக்கு சேகரிப்பு பணியில் ஈடுபட்டனர...