பிசிசிஐ கணக்கு வழக்குகளை லோதா கமிட்டி பராமரிக்க வேண்டும் சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவு

டெல்லி: பிசிசிஐ கணக்கு வழக்குகளை கவனித்துக்கொள்ள, லோதா கமிட்டியே ஆடிட்டர்களை நியமிக்க வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட் அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது. இந்திய கிரிக்கெட் வாரியத்தை சீரமைக்க, உச்சநீதிமன்ற முன்னாள் தலைமை நீதிபதி ஆர்.எம்.லோதா தலைமையில் அமைக்கப்பட்ட குழு பல்வேறு முக்கிய பரிந்துரைகளை வழங்கியது. அதை அமல்படுத்த பிசிசிஐக்கு சுப்ரீம் கோர்ட் உத்தரவிட்டது

இந்த உத்தரவை இன்னமும் பிசிசிஐ அமல்படுத்தாமல் இழுத்தடிக்கும் நிலையில் அதுகுறித்து லோதா கமிட்டி சார்பில் சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது

இதை விசாரித்துவரும் தலைமை நீதிபதி டி.எஸ்.தாக்கூர் தலைமையிலான அமர்வு இன்று ஒரு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதாவது, லோதா கமிட்டி பரிந்துரையை அமல்படுத்தாத பிசிசிஐ, மாநில கிரிக்கெட் சங்கங்களுக்கு ஒரு பைசாவை கூட தரக்கூடாது என்றும், பிசிசிஐ கணக்கு வழக்குகளை லோதா கமிட்டி ஆடிட்டர்களை நியமித்து கட்டுப்பாட்டுக்குள் எடுத்துக்கொள்ளலாம் எனவும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது. மீடியாக்களுக்கு வழங்கப்படும் ஒபந்தம் உள்ளிட்ட பல்வேறு நிதி விவகாரங்களை லோதா கமிட்டியே இனி பார்த்துக்கொள்ள வேண்டும் என்று அதிரடியாக அறிவித்துள்ளது சுப்ரீம் கோர்ட். இந்த வழக்கின் அடுத்த விசாரணையை டிசம்பர் 5ம் தேதிக்கு ஒத்திவைத்துள்ளது நீதிமன்றம்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...