பாதுகாப்பு இல்லாத கழிப்பிடம் மக்கள் அவதி

கோவை பூசாரிபாளையம் பகுதி அருகே அச்சுறுத்தும் நிலையில் உள்ள பெண்கள் கழிப்பிடத்தை சரி செய்ய மாநகராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.

கோவை, பூசாரிபாளையம் அருகே பொதுமக்கள் பயன்பாட்டிற்காக பெண்கள் கழிப்பிடம் கட்டப்பட்டுள்ளது, ஆனால் போதிய மறைப்புகள் இல்லாததாலும், அதை ஒட்டியே ஆண்கள் கழிப்பிடம் கட்டப்பட்ட வருவதால் பெண்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது. மேலும் தகரத்தில் கட்டப்பட்டுள்ள கழிப்பிடத்தின் மீது வேளாண் பல்கலை கழகத்தை ஒட்டியுள்ள மரம் உடைந்து விழுந்துள்ளது, அதுவும் இது வரை அகற்றபடவில்லை எனவும் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகிறது. 

அதேபோல் அப்பகுதி அருகே மாநகராட்சி நிர்வாகத்தால் கட்டப்பட்டுள்ள பொதுகழிப்பிடத்தில் கடந்த சில தினங்களுக்கு முன் சில நபர்கள் பத்து வயது சிறுவனை கழிப்பிடத்திற்கு பின்னால் அழைத்து சென்று கட்டி போட்டு சராமாரியாக தாக்கி உள்ளனர். இதில் படுகாயமடைந்த சிறுவனுக்கு கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இது குறித்து காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை நடைபெற்று வருகிறது. இப்பகுதியில் போதிய பாதுக்காப்பு இல்லாத நிலையில் கழிப்பிடங்கள் உள்ளதால் அப்பகுதி பெண்களிடையே அச்சுறுத்தலை ஏற்படுத்தி உள்ளது.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...