ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து ரூ. 14.65 லட்சம் திருட்டு: ஊழியர்கள் இருவர் கைது

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு ஏடிஎம் இயந்திரங்களில் இருந்து கடந்த 2 மாதங்களில் சிறுகச் சிறுக ரூ. 14.65 லட்சத்தை திருடிச் சென்ற தனியார் நிறுவன ஊழியர்கள் இருவரை போலீஸார் கைது செய்தனர்.

திருவண்ணாமலை, தாமரை நகர், தமிழ்நாடு வீட்டு வசதி வாரிய குடியிருப்பு, 9-ஆவது தெருவைச் சேர்ந்தவர் ஆறுமுகம் (32). இவர், திருவண்ணாமலை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் உள்ள வங்கிகளின் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்பும் பணியை மேற்கொள்ளும் தனியார் நிறுவனம் நடத்தி வருகிறார்.

ஊழியர்களின் துணையுடன் ஏடிஎம் இயந்திரங்களுக்கு பணம் நிரப்பி வந்தார். இந்நிலையில், ஆறுமுகத்திடம் பணிபுரியும் ஊழியர்கள் பணம் நிரம்பும் ஏடிஎம் இயந்திரங்களில் பணம் குறைவாக இருப்பதாக அந்தந்த வங்கி மேலாளர்கள் புகார் தெரிவித்து வந்தனர்.

 இதையடுத்து திருவண்ணாமலை, களம்பூர், சேத்பட், கேட்டவரம்பாளையம், படவேடு, சந்தவாசல், பெரியகொழப்பலூர், துரிஞ்சாபுரம் பகுதிகளில் உள்ள ஸ்டேட் வங்கி, யூனியன் வங்கி, இண்டிகேஷ் ஏடிஎம் மையங்களில் கடந்த சில மாதங்களாக நிரப்பப்பட்ட தொகையை வங்கி அதிகாரிகளுடன் இணைந்து தனியார் நிறுவன உரிமையாளர் ஆறுமுகம் ஆய்வு செய்தார்.

அப்போது, அனைத்து ஏடிஎம் இயந்திரங்களிலும் பணம் குறைவாக நிரப்பப்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, தனது நிறுவனத்தில் பணிபுரியும் சேத்துப்பட்டை அடுத்த கண்ணனூர் கிராமத்தைச் சேர்ந்த வேலு (25), டில்லிபாபு (24) ஆகியோர் மீது ஆறுமுகத்துக்கு சந்தேகம் எழுந்தது.

இதையடுத்து இருவர் மீதும் திருவண்ணாமலை நகர காவல் நிலையத்தில் ஆறுமுகம் புகார் அளித்தார். போலீஸார் வழக்குப்பதிந்து, வேலு, டில்லிபாபு ஆகியோரை ஞாயிற்றுக்கிழமை கைது செய்து விசாரித்கனர்.

விசாரணையில், இருவரும் சேர்ந்து அவ்வப்போது சிறுகச் சிறுக மொத்தம் ரூ.14.65 லட்சத்தை திருடியது தெரியவந்தது. கடந்த 2 மாதங்களாக இந்த திருட்டில் ஈடுபட்டதை ஊழியர்கள் இருவரும் ஒப்புக்கொண்டனராம். ஏடிஎம் இயந்திரங்களில் பணம் நிரப்பும்போதே குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் ரூ.2 லட்சத்து 40 ஆயிரம் வரை பணத்தை திருடினார்களாம்.

இதுதவிர, தங்களின் ஆடம்பர செலவுக்கு பணம் தேவைப்படும் பட்சத்தில் காவலாளி இல்லாத ஏடிஎம் இயந்திரங்களுக்கு இருவரும் செல்வார்களாம். பின்னர், ஏடிஎம் இயந்திரத்தில் பணம் நிரப்பும் பகுதியின் ரகசிய எண்ணை பயன்படுத்தி பணப்பெட்டியை திறப்பார்களாம். பின்னர், அதில் இருந்து தங்களுக்குத் தேவையான பணத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் இயந்திரத்தை லாவகமாக பூட்டிவிட்டுச் செல்வார்களாம்.

இவ்வாறாக கடந்த 2 மாதங்களில் மொத்தம் ரூ.14 லட்சத்து 65 ஆயிரத்தை இருவரும் சேர்ந்து திருடிச் சென்றது போலீஸ் விசாரணையில் தெரியவந்தது. இந்நிலையில், இதுவரை இவர்கள் திருடிய பணத்தை மீட்கும் முயற்சியில் போலீஸார் ஈடுபட்டுள்ளனர்.

Newsletter

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...

கோவை மாவட்ட சட்டமன்ற தேர்தலில் 152 வேட்பாளர்கள் தேர்தல் டெபாசிட் இழப்பு

கோவை மாவட்டத்தில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில் போட்டியிட்ட 183 வேட்பாளர்களில் 152 பேர் தங்கள் டெபாசிட் தொகையை இழந்துள்ளனர...