வெள்ளியால் இழைக்கப்பட்ட வீடுகள் தங்கம், பிளாட்டுகள்.. ஆந்திராவை அதிர வைத்த அரசு அதிகாரியின் ஊழல்


14 வீடுகள், வெள்ளி பொருட்களாலே வார்த்து இழைக்கப்பட்ட அறைகள், 1 கிலோ எடைக்கு தங்க பொருட்கள் என குவித்து வைத்துள்ளது வேறு யாருமல்ல, ஆந்திராவில், போக்குவரத்து துறையில் பணியாற்றும் சாமானிய அரசு ஊழியர்தானாம். பணிக்கு சேர்ந்து 34 வருடத்தில் இத்தனை சொத்துக்களை குவித்து, லஞ்ச ஒழிப்பு போலீசாரை திகைக்க வைத்துள்ளார், 55 வயதாகும் பூர்ணச்சந்திர ராவ்.

1981ம் ஆண்டு, மோட்டார் வாகன இன்ஸ்பெக்டராக பணியை தொடங்கிய பூர்ணச்சந்திர ராவின், வாழ்க்கை, இப்படி பூத்து குலுங்கியது எப்படி என்று தலையை பிய்த்துக்கொள்கிறார்கள் லஞ்ச ஒழிப்பு அதிகாரிகள்.

குண்டூர், ஓங்கோல் மற்றும் நெல்லூர் நகரங்களில் இவர் பணியாற்றியபோது சட்டத்திற்கு விரோதமாக லஞ்சப் பணத்தை வாங்கி குவித்திருப்பது இந்த சொத்துக்களின் மூலம் அம்பலமாகியுள்ளது. இவருக்கு வினுகோண்டா பகுதியில் 7 அப்பார்மென்டுகள், 2 வீடுகள், குண்டூரில் 1 வீடு, ஹைதராபாத் மற்றும் விஜயவாடா நகரங்களில் தலா 2 பிளாட்டுகள் சொந்தமாக உள்ளன. வினுகோண்டாவில் இவர் ஒரு, தானிய மில்லுக்கு ஓனரும் கூட என தெரியவந்துள்ளது

இத்தனையும் அம்பலமான பிறகும், தான் ஒரு ஒழுக்க சீலன் என கூறிவருகிறார் பூர்ணசந்திரராவ். தனது சொத்து மதிப்பு ரூ.3 கோடிதான் என்றும், இது வருமானத்திற்கு உட்பட்டதுதான் எனவும் அவர் கூறுகிறார். ஆனால் குறைந்தபட்சம் என்றாலும், ரூ.25 கோடிக்கும் குறையாக சொத்துக்கள் பூர்ணசந்திரராவுக்கு இருக்கும் என்கிறார்கள் லஞ்ச ஒழிப்பாளர்கள். தொடர்ந்து சொத்துக்களை ஆய்வு செய்யும் பணி நடக்கிறது.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...