மலேஷியாவில் தீ விபத்து: 3 இந்தியர்கள் பலி

கோலாலம்பூர்: மலேஷியாவில், மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி, மூன்று இந்தியர்கள் உட்பட, ஆறு பேர் உடல் கருகி பலியாயினர்.

தென் கிழக்கு ஆசிய நாடான மலேஷியாவில், இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஏராளமானோர், குடியுரிமை பெற்று வசித்து வருகின்றனர். அங்குள்ள ஜோஹர் பஹ்ரூவில், சுல்தான் ஷா பல்நோக்கு மருத்துவமனை செயல்பட்டு வருகிறது. இந்த மருத்துவமனையில், இரண்டாவது தளத்தில், அவசர சிகிச்சை பிரிவில், நேற்று காலை, திடீரென தீ விபத்து ஏற்பட்டது; அடுத்தடுத்த தளங்களுக்கும், தீ வேகமாக பரவியது.

இதையடுத்து, அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு இருந்த நோயாளிகளை மீட்கும் பணியில், ஊழியர்கள் ஈடுபட்டனர்; மற்ற தளங்களில் இருந்த நோயாளிகள், அலறியடித்து வெளியே ஓடி வந்தனர். தீ விபத்தில் சிக்கி, ஆறு பேர் உயிரிழந்தனர்; அவர்களில், இரு பெண்கள் உட்பட மூன்று பேர், இந்திய வம்சாவளியைச் சேர்ந்தவர்கள். இவர்களது பெயர் விபரம் வெளியிடப்படவில்லை.

மலேஷியாவில் தமிழர்கள் அதிகளவில் வசிப்பதால், பலியானோரில், தமிழர்களும் இருக்கலாம் என, அஞ்சப்படுகிறது. இதற்கிடையே, தீயணைப்பு வீரர்கள் பல மணி நேரம் போராடி, தீயை அணைத்ததுடன், உள்ளே சிக்கியவர்களையும் மீட்டனர்; நோயாளிகள் அனைவரும், வேறு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டனர். தீ விபத்து தொடர்பாக, உயர்மட்ட விசாரணைக்கு, மலேஷிய பிரதமர் நஜிப் ரசாக் உத்தரவிட்டு உள்ளார்; தீ விபத்திற்கான காரணம் தெரியவில்லை.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...