ஈராக்கில் 50 முன்னாள் போலீஸ் அதிகாரிகளை கொன்று குவித்த ஐ.எஸ்.தீவிரவாதிகள்

ஈராக்கில் ஐ.எஸ். தீவிரவாதிகள் வசமுள்ள மொசூல் நகரை மீட்க ராணுவம் அதிரடி தாக்குதல் நடத்தி வருகிறது. எனவே தாக்குதலை தாக்குபிடிக்க முடியாமல் பின்வாங்கும் ஐ.எஸ். தீவிரவாதிகள் பொதுமக்களை பிணைக்கைதிகளாக பிடித்து மனிதகேடயமாக பயன்படுத்தி வருகின்றனர்.

இந்த நிலையில் மொசூல் நகரில் தங்கள் பிடியில் இருந்த 50 முன்னாள் போலீஸ் அதிகாரிகளை ஐ.எஸ். தீவிரவாதிகள் சுட்டுக்கொன்றனர். இத்தகவலை ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.

ஈராக் ராணுவம் மொசூலை நெருங்கி சுற்றி வளைப்பதால் ஆத்திரம் அடைந்து அங்குள்ள மக்களை கொன்று குவிக்கின்றனர். மேலும் மொசூலில் இருந்து 45 கி.மீ தூரத்தில் உள்ள சபினா என்ற கிராமத்தில் புகுந்த தீவிரவாதிகள் அங்கு பொதுமக்கள் 15 பேரை சுட்டுக்கொன்று பிணங்களை ஆற்றில் வீசினர்.

அங்கு வாகனத்தில் வந்த 6 பேரின் கைகளை கட்டி கிராமம் முழுவதும் இழுத்து சென்றனர் துலோல் நசெர் என்ற கிராமத்தில் துப்பாக்கி சூடு காயங்களுடன் கூடிய 70 உடல்களை ஈராக் ராணுவம் கண்டுபிடித்தது.

Newsletter

கோவையில் ஒரே நாளில் 800க்கும் மேற்பட்ட தெருநாய்களுக்கு தடுப்பூசி

கோயம்புத்தூர் மாநகராட்சி எல்லைக்குட்பட்ட வார்டு எண்.5, 53, 87 பகுதிகளில் 12.09.2026 அன்று ஒரே நாளில் 800-க்கும் மேற்பட்ட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி - ஐபிஎம் ஹேக்கத்தான்: 16 மாநிலங்களில் இருந்து 1000க்கும் மேற்பட்ட போட்டியாளர்கள்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, ஐபிஎம் நிறுவனத்துடன் இணைந்து 12.09.2026 மற்றும் 1...

பயிர் பிரச்சினைகளை கண்டறிய AI ஏஜென்ட்கள்: ஈசா கல்லூரி மாணவர்களின் 'ஏரோ கிரெயின்' திட்டத்திற்கு நான்காம் பரிசு

கோயமுத்தூர் பிச்சானூர் ஜேசிடி பொறியியல் தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற தேசிய அளவிலான கல்லூரிகளுக்கிடையேயான பொறியியல்...

சாடிவயல் யானைகள் முகாமில் கும்கி யானைகளுக்கு விநாயகர் சதுர்த்தி கஜ பூஜை

கோவை வனக்கோட்டம், போளுவாம்பட்டி வனச்சரகத்திற்கு உட்பட்ட சாடிவயல் யானைகள் முகாமில் 14.09.2026 அன்று விநாயகர் சதுர்த்தி வி...

EASA பொறியியல் கல்லூரியில் 14வது பட்டமளிப்பு விழா: அண்ணா பல்கலைக்கழகத்தில் 8வது ரேங்க் பெற்ற ஈ.ஷஹானாவுக்கு பரிசு

கோவை நவக்கரையில் உள்ள EASA பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியின் 14வது ஆண்டு பட்டமளிப்பு விழா 13.09.2026 அன்று கால...

துடியலூர் சுற்றுவட்டாரப் பகுதிகளில் 300க்கும் மேற்பட்ட விநாயகர் சிலைகள் பிரதிஷ்டை

விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு கோவை துடியலூர், ஐடிஐ, அரவான் திடல் உள்ளிட்ட பகுதிகளில் இந்து அமைப்பினர், பொதுமக்கள் சார்...