வீட்டை காலி செய்யச் சொல்லி மிரட்டும் பூசாரி- ஆட்சியரிடம் மனு

கோவை மாவட்டம், கனுவாய் பகுதியைச் சேர்ந்தவர் சின்னதுரை. இவரது மனைவி ராஜராஜேஷ்வரி (38). அப்பகுதியில் உள்ள சொந்த வீட்டில் வசித்து வருகின்றனர். இந்நிலையில், இவர்களது வீட்டின் அருகில் உள்ள கருப்பராயன் கோவில் பூசாரி தொடர்ந்து இவர்களது வீட்டினை காலி செய்யுமாறு மிரட்டுவதாக மாவட்ட ஆட்சியரிடம் திங்களன்று மனு அளித்தனர். இதுகுறித்து ராஜராஜேஷ்வரி கூறுகையில்,

''கனுவாய் பகுதியில் சொந்த வீட்டில் குடும்பத்துடன் வசித்து வருகிறோம். எனக்கு 2 மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். எங்களது வீட்டின் கட்டிடத்தில் ஒரு பகுதியில் பெட்டிக்கடை வைத்துள்ளேன். எங்களது வீட்டில் இருந்து சுமார் 30 அடி தூரத்தில் கருப்பராயன் கோவில் உள்ளது. அங்கு பூசாரியாக மணி என்பவர் செயல்பட்டு வருகிறார். இந்நிலையில், எங்களது வீட்டினை காலி செய்துவிட்டு வீட்டினை கோவிலுக்கு தந்துவிடுமாறு அந்த கோவில் பூசாரியும், அவரது மனைவியும் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர். நான் அதற்கு மறுப்பு தெரிவித்தநிலையில், தொடர்ந்து அவரும், அவரது மனைவியும் கடவுளின் பெயரைச் சொல்லி எங்களது குடும்பத்தினருக்கு கொலை மிரட்டல் விடுத்து வருகின்றனர். வீட்டினை காலி செய்யாவிட்டால் பல அசம்பாவிதங்கள் ஏற்படும் என கூறுகின்றனர். 

இந்த விசயத்தில் உடனடியாக ஆட்சியர் தலையிட்டு கடவுளின் பெயரைக் கூறி மிரட்டி வரும் கருப்பராயன் கோவில் பூசாரி மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். எனது குடும்பத்தினருக்கு ஏதேனும் அசம்பாவிதம் ஏற்பட்டால் அதற்கு கருப்பராயன் கோவில் பூசாரி மணியே காரணம்'' என கூறினார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...