சர்தார் வல்லபாய் பட்டேல் ஜெயந்தி விழா


கோவையில் செயல்பட்டு வரும் சர்தார் வல்லபாய் பட்டேல் பன்னாட்டு ஜவுளி மற்றும் மேலாண்மை கல்லூரியில் திங்களன்று (இன்று) சர்தார் வல்லபாய் பட்டேல் ஜெயந்தி விழாவும், லஞ்ச ஒழிப்பு வார விழாவும் கொண்டாடப்பட்டது.

இவ்விழாவில் சிறப்பு விருந்தினராக தேசிய ஜவுளித் துறை நிர்வாக இயக்குநர் அருள்சாமி கலந்து கொண்டார். தேசிய ஒருமைப்பாட்டு உறுதிமொழியேற்ற மாணவர்களிடையே அருள்சாமி பேசுகையில் ''தேசம், நாடு, மக்கள் என்று வரும் போது நலத்துடன் ஒற்றுமையுடன் செயல்பட்டு சர்தார் வல்லபாய் பட்டேலின் எண்ணங்களை நடைமுறைப்படுத்த வேண்டும். வளர்ந்துவரும் இளைஞர் சமுதாயம் லஞ்சம் கொடுக்கவும் கூடாது, வாங்கவும் கூடாது. இந்த நாட்டில் எல்லா வளங்களும் உள்ளன. அவற்றினை முறையாக பயன்படுத்தி சமுதாக வளர்ச்சிக்கு உதவ வேண்டும். இந்தியா வல்லரசாகவும், நல்லரசாகவும் விளங்க ஒவ்வொருவரும் பங்களிக்க உறுதிமொழி ஏற்க வேண்டும்'' என்று கூறினார்.



மேலும், இவ்விழாவில் பங்குபேற்ற அனைவரும் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து, மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. அனைவரும் லஞ்ச ஒழிப்பு விழிப்புணர்வு உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். இதைத்தொடர்ந்து, மாணவர்களுக்கான கட்டுரைப் போட்டி மற்றும் பேச்சுப் போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.



இவ்விழாவில் கல்லூரி இயக்குநர் முனைவர் சி.ரமேஷ்குமார் மற்றும் பேராசிரியர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Newsletter

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...