உத்தரகண்டில் ஜீப் பள்ளத்தில் விழுந்து விபத்து: 2 பெண்கள் உள்பட 7 பேர் பலி

டேராடூன்: உத்தரகண்ட் மாநிலத்தில் ஜீப் ஒன்று பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானதில் 2 பெண்கள், சிறுமி உள்பட 7 பேர் பலியாகினர்.

உத்தரகண்ட் மாநிலம் தெஹ்ரி கர்வால் மாவட்டத்தில் உள்ள லாசி கிராமத்தை சேர்ந்த 11 பேர் ஜீப் ஒன்றில் பவ்ரி கர்வால் மாவட்டத்தில் உள்ள பைஜ்ரோ கிராமத்திற்கு சென்றனர்.

அவர்கள் பைஜ்ரோவில் இருந்து ஜீப் மூலம் வீடு திரும்பினர். மலைப்பகுதியில் வந்த ஜீப் தலிசைன் பிளாக்கில் மதியம் 1 மணிக்கு வந்து கொண்டிருந்தபோது 50 அடி ஆழ பள்ளத்தில் விழுந்து விபத்துக்குள்ளானது.

இந்த விபத்தில் 2 பெண்கள், சிறுமி உள்பட 7 பேர் பலியாகினர், 4 பேர் காயம் அடைந்தனர். காயம் அடைந்தவர்கள் பைஜ்ரோ மற்றும் காஷிபூரில் உள்ள மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...