பழங்குடியினரின் இடத்தை ஆக்கிரமித்த ஈஷா- உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்புலிகள் இயக்கத்தினர் கைது



கோவை மாவட்டத்தில் அமைந்துள்ள ஈஷா மையத்தால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள 44 ஏக்கர் நிலங்களை மீட்டு பழங்குடியின மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்கக் கோரி குடியேறும் போராட்டத்தில் ஈடுபட்ட தமிழ்புலிகள் அமைப்பைச் சேர்ந்த சுமார் 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர்.

கடந்த 1971ம் ஆண்டு நில உச்சவரம்பு சட்டத்தின் கீழ் கோவை முட்டத்துவயல் பகுதியில் முத்துச்சாமி (அ) அமெரிக்க கவுண்டர் என்பவரால் பழங்குடியின மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு 44 ஏக்கர் நிலம் பட்டா செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இந்த நிலத்தை கோவையில் செயல்பட்டு வரும் ஈஷா யோகா மையம் முறைகேடாக ஆக்கிரமித்து கட்டிடங்கள் கட்டி வருவதாக சமீபத்தில் குற்றச்சாட்டு எழுந்தது.



இதைத்தொடர்ந்து, ஈஷா அமைப்பால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலத்தை மீட்டு பழங்குடியின மற்றும் தாழ்த்தப்பட்ட மக்களுக்கு வழங்க வேண்டும் என பல்வேறு சமூக அமைப்புகளின் சார்பில் கோரிக்கை ஆர்ப்பாட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக தமிழ்புலிகள் அமைப்பின் சார்பில் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள இடத்தில் குடியேறும் போராட்டம் வெள்ளியன்று (இன்று) நடைபெற்றது.



கோவை இருட்டுப்பள்ளம் பகுதியில் இருந்து பேரணியாக வந்த அவ்வமைப்பினரை செம்மேடு பகுதியின் முன்பாக காவல் துறையினர் தடுத்து நிறுத்தினர். இதனைத்தொடர்ந்து, தமிழ்புலிகள் அமைப்பின் தலைமை நிலைய செயலாளர் முகிலரசன் கூறுகையில், முதற்கட்டமாக குடியேறும் போராட்டம் நடைபெற்றுள்ளது. அடுத்த கட்டமாக மக்களைத் திரட்டி ஈஷா அமைத்துள்ள வேலிகளை பிடுங்கி எறியும் போராட்டம் நடத்தப்பட உள்ளது என தெரிவித்தார்.

இதையடுத்து, அனுமதியின்றி போராட்டத்தில் ஈடுபட்டதாகக் கூறி தமிழ்புலிகள் அமைப்பினர் மற்றும் பெண்கள் உட்பட 100க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட்டனர். இந்தப் போராட்டம் காரணமாக ஏராளமான காவல் துறையினர் அப்பகுதியில் குவிக்கப்பட்டிருப்பதால் அங்கு பரபரப்பான சூழல் நிலவி வருகிறது.



Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...