நேஷனல் ஜியாகிராபிக்ஸ் ஆப்கானிஸ்தான் பெண் நாடு கடத்தல் இல்லை பாகிஸ்தான் ’திடீர்’ முடிவு

பெஷாவர்: நேஷனல் ஜியாகிராபிக்ஸ் ஆப்கானிஸ்தான் பெண் நாடு கடத்தல் இல்லை என்று பாகிஸ்தான் திடீரென அறிவித்து உள்ளது.

ஆப்கானிஸ்தான் போரின் போது ஷார்பத் குலா என்ற பெண் தனது 12-வது வயதில் பாகிஸ்தானுக்கு அகதியாக குடிபெயர்ந்து அகதிகள் முகாமில் இருந்துள்ளார். அப்போது பச்சை நிற கண்களுடன் வித்தியாசமாக இருந்த அவரை பிரபல ’நேஷனல் ஜியாகிராபிக்’ பத்திரிகை புகைப்படக்காரர் படம் பிடித்து ’ஆப்கன் மோனலிசா’ என்ற அடைமொழியுடன் அந்த பத்திரிகையின் அட்டையில் வெளியிட்டார். இதன் மூலம் அவர் உலக பிரபலம் ஆனார். பின்பு அங்கேயே வசித்து வந்தார். இந்த நிலையில் தற்போது 44 வயதாகும் ஷார்பத் குலா பாகிஸ்தானில் போலியான அடையாள அட்டையுடன் தங்கி இருந்ததாக பாகிஸ்தான் புலனாய்வு பிரிவு அதிகாரிகளால் கைது செய்யப்பட்டார். 

 

இந்த வழக்கு விசாரணையின் போது அவர் தனது குற்றத்தை ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவருக்கு 15 நாள் சிறைத்தண்டனையும், பாகிஸ்தான் ரூ.1 லட்சத்து 10 ஆயிரமும் (நமது நாணய மதிப்புப்படி சுமார் ரூ.74 ஆயிரம்) அபராதம் விதித்து தீர்ப்பு வழங்கினார். தண்டனை காலம் முடிந்ததும் அவரை ஆப்கானிஸ்தானுக்கு திரும்ப அனுப்பவும் நீதிபதி உத்தரவிட்டார். தன்னுடைய இறந்த கணவர் ரக்மத் குல் கடந்த 1988-ம் ஆண்டு தேசிய அடையாள அட்டையை பெற்று இருந்தார், இதன் மூலம் முகவருக்கு லஞ்சம் கொடுத்து அடையாள அட்டையை வாங்கினேன் என்று குலா கூறிஉள்ளார்.

இதுதொடர்பாக அக்டோபர் 20-ம் தேதி பாகிஸ்தான் விசாரணை அதிகாரிகள், முன்னாள் அரசு அதிகாரிகள் மற்றும் மோசடியில் ஈடுபட்டவர்கள் மீது வழக்குப்பதிவு செய்தனர். 

இந்நிலையில் நேஷனல் ஜியாகிராபிக்ஸ் ஆப்கானிஸ்தான் பெண் நாடு கடத்தல் இல்லை என்று பாகிஸ்தான் திடீரென அறிவித்து உள்ளது.

குலாலின் 15 நாள் தண்டனை புதன் கிழமையுடன் முடிவு அடைகிறது. இந்நிலையில் கைபர் பக்துன்க்வா மாகாண அரசு அதிகாரி யூசுப் சாய், குலால் நாடு கடத்தப்பட மாட்டார் என்று அறிவித்து உள்ளார். இதுதொடர்பாக எடுக்கப்பட்ட நடவடிக்கையை மாகாண அரசு நிறுத்துவிட்டது.  பாகிஸ்தான் தெரிக் -இ- இன்சாப் கட்சியின் தலைவர் இம்ரான் கான், குலாலை நாடு கடுத்துவதை நிறுத்த வேண்டும் என்று மாகாண முதல்-மந்திரிக்கு கோரிக்கை விடுத்து இருந்தார். இந்நிலையில் மனிதநேயத்தின் அடிப்படையில் நாடு கடுத்தும் முடிவு நிறுத்தப்பட்டு உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.

ஆப்கானிஸ்தான் அகதிகள் விவகாரத்தை பாகிஸ்தான் கடந்த 30 வருடங்களாக எதிர்க்கொண்டு வருகிறது. இதுவரையில் சுமார் 3 மில்லியன் ஆப்கானிஸ்தான் அகதிகள் பாகிஸ்தானில் உள்ளதாக கூறப்படுகிறது.

Newsletter

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் இருதயவியல் அல்ட்ராசவுண்ட் கருத்தரங்கு நடைபெறுகிறது

ஶ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனை மற்றும் இணை அறிவியல் கல்லூரி இணைந்து "ECHO ESSENTIALS 2026" என்ற தலைப்பில் இரு நாள் கருத்தர...

குழந்தைகளைத் தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்ததாக நடிகர் விஜய் மீது புகார்

தேர்தல் ஆதாயத்திற்காக குழந்தைகளின் மனநிலையைத் தவறாகப் பயன்படுத்தியதாக தமிழக வெற்றிக் கழகத் தலைவர் விஜய் மீது Coimbatore...

தமிழக சட்டமன்றத் தேர்தல்: கோவை மாவட்டத்தில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு - தொகுதி வாரியான முழு விவரங்கள்

கோவை மாவட்டத்தில் நேற்று நடைபெற்ற தமிழக சட்டமன்றத் தேர்தலில் 84.67 சதவீதம் வாக்குப்பதிவு பதிவானது. மொத்தம் 27 லட்சத்திற்...

கோவை ஜிடி மேம்பாலத்தில் AI கேமரா பொருத்தும் பணி: இரவு நேர போக்குவரத்துக்கு இன்றும் நாளையும் தடை

கோவை ஜிடி மேம்பாலத்தில் அதிவேக வாகனங்களை கண்காணிக்க AI கேமரா பொருத்தும் பணி காரணமாக இன்று மற்றும் நாளை இரவு 10 மணி முதல்...

கோவையில் பட்டபகலில் கார் மீது கல்வீச்சு தாக்குதல் - சிசிடிவி காட்சி வெளியானது

கோவை ஆவாரம்பாளையம் பகுதியில் வீட்டின் முன்பு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த காரின் மீது ஹெல்மெட் அணிந்த நபர் பட்டபகலில் கல்...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் காளான் மற்றும் முருங்கை மதிப்பூட்டு பயிற்சி

கோவை தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் ஏப்ரல் 28, 29 ஆகிய தேதிகளில் காளான் மற்றும் முருங்கையிலிருந்து மதிப்பூட்டப்ப...