ரூபாய் நோட்டுகளில் கடவுள்களின் படங்கள் இடம்பெற வேண்டும் - இந்து மக்கள் கட்சி வலியுறுத்தல்


பிரதமர் நரேந்திர மோடி, நேற்று மாலை நிகழ்த்திய உரையில், 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்றும் வங்கிகளில் சென்று பழைய ரூபாய் நோட்டுகளை கொடுத்து புதிய 500 மற்றும் 2000 ரூபாய் நோட்டுகளை பெற்றுக்கொள்ளலாம் என்றும், கருப்பு பணத்தை ஒழிப்பதற்கான இந்த நடவடிக்கைக்கு மக்கள் ஆதரவளிக்குமாறும் தெரிவித்தார்.



பிரதமரின் இந்த திட்டத்தை வரவேற்கும் வகையில் கோவையில் இந்து மக்கள் கட்சியினர் இனிப்புகள் வழங்கி கொண்டாடினர். தொடர்ந்து அக்கட்சியின் நிறுவனர் அர்ஜூன் சம்பத் செய்தியாளர்களிடம் கூறியதாவது:-

கருப்பு பணத்தை ஒழிக்கும் வகையில் பிரதமர் இத்திட்டத்தை கொண்டுவந்துள்ளார். தமிழக மக்கள் மட்டுமல்லாது, இந்தியாவில் அனைத்து மக்களும் மகிழ்ச்சியில் உள்ளனர். ஏழை மக்கள் மிகப்பெரிய வரவேற்பை கொடுத்துள்ளனர். பாகிஸ்தானில் அச்சாகும் கள்ள நோட்டுகளையும், இந்தியாவில் பதுக்கப்பட்ட கருப்பு பணத்தையும் மீட்கும் முயற்சி. மோடி அரசின் இந்த முயற்சி மூலம் மிகப்பெரிய மாற்றம் ஏற்பட உள்ளது. இதை விரும்பாத சக்திகள் பல அவதூறுகளை பரப்பி வருகின்றனர். 500 மற்றும் 1000 ரூபாய் நோட்டுகளில் சுண்டல் மடிப்பத் போன்ற படங்கள் சமூக வலைதளங்களில் வலம் வருகிறது. இது அரசை அவமதிக்கும் செயல். அனைவரும் இத்திட்டத்தை வரவேற்போம். சிரமங்களை மக்கள் பொறுத்துக்கொண்டு எல்லோரும் இணைந்து அரசை வலுப்படுத்துவோம்.



இந்தியாவின் அனைத்து தேசிய தலைவர்களின் புகைப்படமும் ரூபாய் நோட்டுகளில் இடம் பெற வேண்டும். லட்சுமி,விநாயகர் போன்ற கடவுள்களில் படமும் இடம்பெற வேண்டும் இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...