பேரூர் குளக்கரையில் ஆக்கிரமிப்பா? அதிகாரிகள் விசாரணை


கோவை மாவட்டத்தில் 28 குளங்கள் உள்ளன. அதில் 10 குளங்கள் மாநகராட்சி வசம் உள்ளன. மீதம் உள்ளவை பொதுப்பணித்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ளன.  அதில் ஒன்று பேரூர் குளம். நொய்யல் நதிக்கரையை அடுத்த  புட்டு விக்கி பாலத்தின் அருகே அமைந்துள்ளது இந்த பேரூர் குளம்.கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக இப்பகுதியில் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த சுமார் 10 குடும்பங்கள் குளத்தின் கரைப்பகுதியில் கூடாரம் அமைத்து குடிபுகுந்துள்ளனர். 



மதுக்கரை பகுதியில் அமைந்துள்ள இந்திய இராணுவ முகாமில் குழாய் பதிக்கும் பணிக்காக கோவை வந்ததாகவும், ஒரு மாத காலத்தில் ஆந்திராவுக்கு திரும்ப இருப்பதாகவும் அப்பகுதியில் முகாமிட்டுள்ள மக்கள் தெரிவித்தனர். 

இது குறித்து பொதுபணித்துறை அதிகாரி ஒருவர்  கூறுகையில், 'ஆந்திர மக்கள் பேரூர் குளக்கரையில் கூடாரம் அமைத்திருப்பது தொடர்பான விவரம் எங்களுக்கு தெரியவில்லை. தற்காலிக பணி நிமித்தமாக அந்த மக்கள் குளக்கரையில் குடிபுகுந்திருக்கலம். உடனடியாக இது குறித்து விசாரணை நடத்துகிறோம். அவ்வாறு அவர்கள் இராணுவ பணி காரணமாக அங்கு குடியமர்த்தப்பட்டிருந்தால் உடனடியாக அவர்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து  அப்பகுதியில் இருந்து அப்புறப்படுத்த நடவடிக்கை எடுக்கிறோம்' என்றார். 



மழைக்காலம் என்பதால் இப்பகுதியில் உள்ள குளம் நிரம்பும் வாய்ப்புள்ளது. எனவே, அதிகாரிகள் துரிதமாக செயல்பட்டு குளத்தில் வசிக்கும் மக்களுக்கு மாற்று ஏற்பாடு செய்து கொடுப்பது சிறந்தது.

Newsletter

கோவையில் ரோட்டராக்ட் கிளப் ஆஃப் கோவை நைட்ஸ் சார்பில் ARENA ஸ்போர்ட்ஸ் மீட்

கோவை வெங்கிட்டாபுரம் பகுதியில் உள்ள மாநகராட்சி கமல்நாதன் நினைவு மேல்நிலைப் பள்ளி வளாகத்தில், தேசிய விளையாட்டு தினத்தை மு...

கோவை வார்டுகள் 12, 13-ல் வளர்ச்சிப் பணிகள்: மாநகராட்சி ஆணையாளர் ஆய்வு

கோவை மாநகராட்சி வடக்கு மண்டலம் வார்டு எண்.12 மற்றும் 13க்கு உட்பட்ட பகுதிகளில் நடைபெறவுள்ள வளர்ச்சித் திட்டப் பணிகள் தொட...

காணியாளம்பாளையம் MIRA HOMES பகுதியில் ஈக்கள் தொல்லை: உடனடி நடவடிக்கை கோரி மனு

கோவை மாவட்டம் கிணத்துக்கடவு தாலுகா கக்கடவு ஊராட்சிக்கு உட்பட்ட காணியாளம்பாளையம் MIRA HOMES DTCP அப்ரூவல் வீட்டுமனை பகுதி...

இடையர்பாளையத்தில் காங்கிரஸ் இயக்க மறு சீரமைப்பு கூட்டம்

கோவை மாநகர் மாவட்டம் கவுண்டம்பாளையம் சர்க்கிள் கமிட்டி சார்பாக இந்திய தேசிய காங்கிரஸ் மறு சீரமைப்பு இயக்கத்தின் எஸ் எஸ்...

எஸ்.பி.வேலுமணி டெண்டர் முறைகேடு வழக்கு: 2 ஐஏஎஸ் அதிகாரிகள் மீது வழக்குத் தொடர அனுமதியில் தாமதம் ஏன்? நீதிபதி கேள்வி

முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான டெண்டர் முறைகேடு வழக்கில், ஐஏஎஸ் அதிகாரிகள் கந்தசாமி மற்றும் விஜய கார்த்திகே...

கோவை தெற்கு மண்டலத்தில் ரூ.51.90 இலட்சம் மதிப்பீட்டு பணிகளை திறந்து வைத்த அமைச்சர் க.விக்னேஷ்

கோவை மாநகராட்சி தெற்கு மண்டலத்தில் ரூ.25 இலட்சம் மதிப்பீட்டிலான முடிவுற்ற திட்டப்பணிகளை மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்த...