நீலகிரி மாவட்டம் குன்னூர் உதவி ஆட்சியருக்கு, 6 மாதம் சிறை- பழனி விரைவு நீதிமன்றம் தீர்ப்பு!

நீலகிரி மாவட்டம் குன்னூர் உதவி ஆட்சியருக்கு, 6 மாதம் சிறை தண்டனை வழங்கி பழனி விரைவு நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பளித்துள்ளது. திண்டுக்கல் மாவட்டம் பழனி இந்திரா நகரைச் சேர்ந்தவர் மருதசாமி (65). இவரது வீட்டில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் பழனி துணை வட்டாட்சியராக இருந்த பாஸ்கரன் வாடகைக்கு குடியிருந்துள்ளார். அப்போது பாஸ்கரன் சொந்த வீடு கட்டி வருவதாகவும், பணம் பற்றாக்குறையாக இருப்பதால் ரூ. 3 லட்சம் கடனாக தரும் படியும் மருதசாமியிடம் தெரிவித்து கடன் வாங்கியுள்ளார். கடன் தொகைக்கு வங்கிக் காசோலையை ஈடாக தந்துள்ளார். பின் வீடு கட்டி வீட்டை காலி செய்த பின்பும் கடனை திருப்பித் தரவில்லை. இதையடுத்து, காசோலையை வங்கியில் வழங்கிய போது பணம் இல்லாமல் திரும்பி விட்டது.

இதனால் மருதசாமி, பழனி விரைவு நீதிமன்றத்தில் காசோலை மோசடி வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த நீதிபதி மணிகண்டன், பாஸ்கரனுக்கு 6 மாதம் சிறை தண்டனை வழங்கி உத்தரவிட்டார். பாஸ்கரன் தற்போது நீலகிரி மாவட்டம் குன்னூரில் உதவி ஆட்சியராக உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...