திப்பு சுல்தான் ஜெயந்தி விழாவில் செல்போனில் ஆபாச படம் பார்த்து ரசித்த கர்நாடக மந்திரி

பெங்களூர், கர்நாடகாவின் ரெய்ச்சூரில் இன்று திப்பு சுல்தான் ஜெயந்தி விழா கொண்டாடப்பட்டது. இதில் கலந்து கொண்ட அமைச்சர் தன்வீர் சேட் மேடையிலேயே செல்போனில் ஆபாசபடம் பார்த்து உள்ளார். இதை அவருக்கு தெரியாமல் விழா நிகழ்ச்சிகளை வீடியோ எடுத்துக்கொண்டு இருந்த தனியார் டி.வி சேனல் ஒளிப்பதிவாளர் படம் பிடித்து விட்டார்.

இது தொலைக் காட்சிகளில் ஒளிபரப்பானது. இதைப்பார்த்த மக்கள்அதிர்ச்சி அடைந்தனர்.

மந்திரியின் செயலுக்கு மாநில பா.ஜனதா தலைவர் எடியூரப்பா, எதிர்க்கட்சி தலைவர்கள் ஜெகதீர் ஷெட் டர், ஈஸ்வர்யா, மதசார் பற்ற ஜனதா தள தலைவர் குமாரசாமி உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்து இருப்பதுடன் மந்திரி தன்வீர் சேட் உடனடி யாக ராஜினாமா செய்ய வேண்டும் என்று போர்க் கொடி உயர்த்தினர்.

இதற்கிடையே தன்மீதான குற்றச்சாட்டை மந்திரி தன்வீர் சேட் அடியோடு மறுத் தார் “ விழா மேடை யில் இருந்த போது மாநிலம் முழுவதும் நடந்த திப்பு சுல்தான் பிறந்த நாள் விழா தொடர்பான புகைப் படங்களை செல்போனில் தேடிக்கொண்டு இருந்தேன். அப்போது எனது வாட்ஸ் அப்பில் அனுப்பிய ஆபாசப் படங்கள் எதேச்சையாக வந்து சென்றன. நானாக நிர்வாணப்படங்களை தேடிப்பார்க்கவில்லை என்று கூறினார்.

மந்திரி நிர்வாணப்படம் பார்த்த விவகாரம் குறித்து அறிந்த முதல்-மந்திரி சித்தராமையா உடனடியாக டெலிபோன் மூலம் தொடர்பு கொண்டு கண்டித்தார். இது குறித்து விளக்கம் கேட்டுள்ள அவர் உடனடியாக அறிக்கை அளிக்குமாறு உத்தர விட்டார்.

முந்தைய பா.ஜனதா ஆட்சியின் போதும் மந்திரி களாக இருந்த சி.சி.பட்டீல், கிருஷ்ணபாளேமர், லட்சுமணன் சவதி ஆகியோர் தங்களது செல்போனில் அழகிகளின் நிர்வாணப் படங்களை பார்த்து ரசித்தனர். இது கர்நாடக அரசியில் பரபரப்பை ஏற்படுத்தியது. இதையடுத்து 3 மந்திரிகளும் தங்களது பதவியை ராஜினாமா செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...