பாலைவனம் சூழ்ந்த துபாயில் கற்பனைக்கு எட்டாத வகையில் பிரம்மாண்ட கால்வாய் திறப்பு

பாலைவனம் சூழ்ந்த துபாய் நகரம் கற்பனைக்கு எட்டாத வகையில் பிரம்மாண்ட வளர்ச்சியை பெற்றதோடு தற்போது புதிய அடையாளமாக பிரம்மாண்ட கால்வாயும் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. துபாயில் 3.2 கிலோமீட்டர் தூரத்திற்கு திர்ஹம்ஸ் 270 கோடி செலவில் சாலை மற்றும் போக்குவரத்து ஆணையம் சார்பில் பிஸினஸ் பே பகுதியில் அமைந்துள்ள கால்வாயுடன் ஜுமைரா பகுதியை இணைக்கும் வகையில் புதிய நீர் கால்வாய் பணிகள் மேற்கொள்ளப்பட்டு பணிகள் முழுவதும் நிறைவுபெற்றது. இந்த கால்வாய் பகுதி துபாய் கடல் பகுதியில் தொடங்கி  ஜுமைரா சாலை, அல்வாசல் சாலை சபா பூங்கா ஆகிய பகுதிகளை கடந்து பிசினஸ் பே பகுதியை அடையும்.

இதன் தொடக்க விழா துபாயில் நடைபெற்றது.புதிய கால்வாயை துபாய் ஆட்சியாளரும், அமீரக பிரதமருமான மேதகு ஷேக் முஹம்மது பின் ராசித் அல் மக்தூம் திறந்து வைத்தார்.துவக்க நாளன்று கால்வாய் பகுதி லேசர் ஒளிகதிர் மூலம் வண்ணமயமாக மின்னியது தற்போது அமைக்கப்பட்டுள்ள 3.2 கிலோ மீட்டர் கால்வாய் மூலம் ஏற்கெனவே பிஸினஸ் பே பகுதியில் உள்ள கால்வாயையும் சேர்ந்து பெரிய அளவில் கால்வாய் விரிவடைந்து உள்ளது. இதன் மூலம் துபாயில் நீர் வழி போக்குவரத்து அதிகரிக்கும். கால்வாயில் 5 இடங்களில் படகு நிறுத்தும் இடங்கள் உள்ளது. 5 நடை மேம்பாலங்கள் அமைக்கப்பட்டுள்ளது. இந்த நீர் கால்வாய் துபாய் நகருக்கு மேலும் அழகு சேர்த்துள்ளது.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...