பெண் உதவி பேராசிரியரிடம் 12 பவுன் தாலிச்சங்கிலி பறிப்பு


கோவை சின்னியம்பாளையம் பகுதியை சேர்ந்தவர் காசிராஜன். இவரது மனைவி பிரதீபா (32). தனியார் பொறியியல் கல்லூரி ஒன்றில் உதவி பேராசிரியராக பணிபுரிகிறார். நேற்று இரவு பிரதீபா மற்றும் அவரது சகோதரி கிருத்திகா ஆகிய இருவரும் இரு சக்கர வாகனத்தில் வீட்டிற்கு சென்றனர். சின்னியம்பாளையம் பேருந்து  நிலையம் அருகே சென்றபோது, இரு சக்கர வாகனத்தில் வந்த இருவர், பிரதீபா கழுத்தில் அணிந்திருந்த 12 பவுன் தாலி சங்கிலையை பறித்தனர்.

இதனால் அதிர்ச்சியடைந்த அவர் கூச்சலிடவே அருகிலிருந்த பொது மக்கள், கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை விரட்டினர். ஆனால், அதற்குள் அவர்கள் இருவரும் அதிவேகமாக தப்பிச்சென்றனர். இது குறித்து பிரதீபா பீளமேடு போலீசாரிடம் புகார் அளித்ததன் பேரில் வழக்கு பதிவு செய்து போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர்.

Newsletter

கரூரில் வாக்களிக்காத செந்தில் பாலாஜி; அதிமுகவினர் விமர்சனம்

சட்டமன்ற தேர்தலில் கோவை தெற்கு தொகுதி வேட்பாளரும் கோவை திமுக தேர்தல் பொறுப்பாளருமான செந்தில் பாலாஜி தனது சொந்த ஊரான கரூர...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் பூச்சாட்டு திருவிழா கோலாகலம்

குனியமுத்தூர் பழனி ஆண்டவர் கோயிலில் இன்று பூச்சாட்டு திருவிழா நடைபெற்றது. சிறப்பு அபிஷேகம், அலங்காரங்கள் செய்யப்பட்ட சுவ...

கோவை வாக்கு எண்ணிக்கை மையத்தில் 300 CCTV கேமராக்கள் மூலம் மூன்றடுக்கு பாதுகாப்பு

கோவை மாவட்டத்தில் 84.67 சதவீத வாக்குப்பதிவுக்குப் பிறகு, 10 சட்டமன்ற தொகுதிகளின் வாக்குப்பதிவு இயந்திரங்கள் அரசு தொழில்ந...

கோவையில் அண்ணாமலை வாக்களிப்பு: எப்போதும் இதே Dress Code தான்..! - கலகலப்பான பதில்..!

கோவை பீளமேட்டில் உள்ள பிஎஸ்ஜி கல்லூரி வளாகத்தில் வாக்களித்த பாஜக முன்னாள் மாநில தலைவர், அண்ணாமலை , தனது உடை குறித்து எழ...