தனியார் மருத்துவமனையில் 3 வயது குழந்தை உயிரிழந்ததால் பெற்றோர் மருத்துவமனை கண்ணாடியை உடைத்தனர்

கோவையில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட 3 வயது குழந்தைக்கு சரியான சிகிச்சை அளிக்காததால் உயிரிழந்துவிட்டதாகக் கூறி குழந்தையின் பெற்றோர் மருத்துவமனை கண்ணாடிக் கதவை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

கோவை, பெரியகுயிலி பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். அவர் தனது மூன்றரை வயது பெண் குழந்தையான தீபஸ்ரீ-க்கு உடல் நிலை குறைவு காரணமாக சிங்காநல்லூர் பகுதியில் உள்ள சைல்ட் டிரஸ்ட் எனும் குழந்தைகள் நல மருத்துவமனையில் அனுமதித்துள்ளார்.

செவ்வாயன்று குழந்தை சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தைக்கு நிமோனியா நோய் பாதிப்பு இருப்பதாகக் கூறி மருத்துவர்கள் சிகிச்சை அளித்து வந்தனர். இந்த சூழலில் புதனன்று (இன்று) பிற்பகல் குழந்தை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தது.

இதனையடுத்து மருத்துவர்களின் அலட்சியப் போக்கு காரணமாகவே குழந்தை உயிரிழந்ததாகக் கூறி பெற்றோர் மருத்துவர்களிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.

அப்போது ஆத்திரமடைந்த குழந்தையின் தந்தை சிவகுமார் திடீரென மருத்துவமனையின் தீவிர சிகிச்சை பிரிவு கதவு கண்ணாடியை உடைத்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

இதுகுறித்து, தகவல் அறிந்து வந்த சிங்காநல்லூர் காவல் நிலைய போலீசார் இரு தரப்பினரிடமும் விசாரணையில் ஈடுபட்டுள்ளனர்.

இதனிடையே மருத்துவமனை நிர்வாகம் குழந்தையை அனுமதித்தது  முதல் அலட்சியமாக நடந்து கொண்டதாகவும், ஐநூறு மற்றும் ஆயிரம் ரூபாய் நோட்டுகள் செல்லாது எனக் கூறி அலைகழித்ததாகவும் குழந்தையின் பெற்றோர் குற்றம்சாட்டியுள்ளனர்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...