ரூபாய் தாள்களுக்கு கடும் தட்டுப்பாடு: பூடான் நோட்டுக்களை பயன்படுத்தும் அசாம் எல்லையோர கிராம மக்கள்

ரூ.1,000, ரூ.500 நோட்டுகள் செல்லாது என பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட அதிரடி அறிவிப்பை தொடர்ந்து, நாடு முழுவதும் குறைந்த மதிப்பிலான ரூபாய் நோட்டுகளுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு உள்ளது.‘செல்லாது’ என அறிவிக்கப்பட்டுள்ள ரூ.1,000, ரூ.500 நோட்டுகளை மாற்றவும், கணக்கில் இருந்து பணம் எடுக்கவும் வங்கிகளிலும், ஏ.டி.எம். மையங்களிலும் மக்கள் மணிக்கணக்கில் காத்து கிடக்கிற நிலை, நீடிக்கிறது. அப்படி எடுக்கிற பணத்தையும் பொதுமக்களில் ஒரு தரப்பினர் புழக்கத்தில் விடாமல் பாதுகாக்கும் நிலையும் உள்ளதால், பண தட்டுப்பாடு முடிவுக்கு வராமல் தொடர் கதையாக நீளுகிறது.

நாடு முழுவதும் எந்த பாரபட்சமும் இன்றி மக்கள் திண்டாடி வரும் நிலையில், அசாம் மாநிலத்தின் எல்லையோர கிராம மக்கள் மாற்று வழியை கையாள  ஆரம்பித்துள்ளனர். அசாம் எல்லைப்பகுதியில் உள்ள பூடான் நாட்டு பணத்தை கொடுத்து பொருட்களை வாங்க ஆரம்பித்துள்ளனர். இதன் காரணமாக பூடான் ரூபாய் மதிப்பின் தொகை 25 சதவீதம் அந்த பகுதிகளில் அதிகரித்துள்ளது.  எல்லையில் உள்ள டாட்குரி பகுதியில் பூடான் ரூபாய் தாள்களை அங்குள்ள சில்லறை விற்பனை கடைகளில் மக்கள் எளிதாக பெற்றுச்செல்கின்றனர்.

டாட்குரி கிராமத்தில் கடை வைத்துள்ள ஒருவர் கூறுகையில், இங்குள்ள கிராமங்களில் வங்கிகளோ, ஏடி.எம் மையங்களோ கிடையாது. ஏ.டி.எம் மையங்களுக்கு செல்ல வேண்டும் என்றால் 50 கி.மீட்டர் செல்ல வேண்டும். சவாலான சாலைகளில் அங்கு செல்வது கடினமான பணி ஆகும். எஸ்.பி.ஐ யின் நடமாடும் ஏ.டி.எம்  வாரத்தில் மூன்று நாட்கள் மட்டுமே வருகிறது. எனவே இங்குள்ள மக்கள் பூடான் கரன்சியை பயன்படுத்தி வருகின்றனர்” என்றார்.  பணம் வழங்குவதற்கு உரிய  நடவடிக்கைகளை எடுத்து வருவதாக மாவட்ட நிர்வாகம் விளக்கம் அளித்துள்ளது.

Newsletter

பெரியார் 148வது பிறந்தநாள்: கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி

பெரியாரின் 148வது பிறந்தநாளை முன்னிட்டு கோவையில் சமூக நீதி நாள் கருஞ்சட்டை பேரணி நடைபெற்றது. மகளிர் பாலிடெக்னிக் கல்லூரி...

கோவையில் கஞ்சா வழக்கு குற்றவாளிக்கு 5 ஆண்டு சிறை

கோவை MTP ரோடு MGR மார்க்கெட் அருகே 2019ம் ஆண்டு நடந்த கஞ்சா விற்பனை வழக்கில் இரண்டாம் எதிரி தினேஷுக்கு 5 ஆண்டுகள் சிறைத்...

Two Road Accidents Leave Pedestrian, Cyclist Injured in Coimbatore

An unidentified pedestrian, aged around 40, sustained a head injury after being hit by a motorcycle on Mettupalayam Road...

கோவையில் இரண்டு தனி விபத்துகள்: இருவருக்கு பலத்த காயம்

கோவை தடாகம் ரோடு கே.என்.ஜி புதூர் பகுதியில் சைக்கிளில் சென்ற அஸ்வின் (21) என்பவர் மீது எதிர்திசையில் வந்த கார் மோதி இடது...

கோவை பீளமேடு வார்டு 27-ல் பல்வேறு மாநகராட்சி பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

கோவை சிங்காநல்லூர் தொகுதிக்குட்பட்ட மாநகராட்சி வார்டு எண் 27, பீளமேடு பகுதியில் செப்டம்பர் 17, 2026 அன்று வார்டு கவுன்சி...

ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு அணைகளில் நீர்மட்டம் உயர்வு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆனைமலை ஆழியாறு அணையில் 65.45 அடியாகவும், பொள்ளாச்சி பரம்பிக்குளம் அணையில் 5...