வால்பாறை நீதிமன்ற வளாகத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது

சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் தலைமையிலான சட்ட வல்லுநர்கள் குழு உலக நாடுகளில் உள்ள சட்டங்களை எல்லாம் அலசி ஆராய்ந்து ஒரு சட்ட முன்வடிவை அரசு பரிந்துரை செய்து இந்திய அரசியலமைப்பு சபையால் அந்த முன்வடிவு அங்கீகரிக்கப்பட்ட நாள் நவம்பர் 26-ஆம் தேதி ஆகும்.



அந்நாளை சட்ட நாளாக கொண்டாடப்படும் வகையில் இன்று வால்பாறை நீதிமன்ற வளாகத்தில் சட்ட விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது.

இந்த முகாமிற்கு வால்பாறை வட்ட சட்டப்பணிகள் குழு மற்றும் மாவட்ட உரிமையியல் மற்றும் நீதித்துறை நடுவர் நீதிபதி ஆறுமுகம் தலைமை வகித்தார். வால்பாறை வழக்கறிஞர் சங்க செயலாளர் பெருமாள் வரவேற்புரை ஆற்றினார். வால்பாறை வனச்சரக அலுவலர் சக்திவேல், மாணாம்பள்ளி வனச்சரக அலுவலர் சேகர், நகராட்சி பொறியளர் ராஜகோபால், மோட்டார் வாகன ஆய்வாளர் முருகானந்தம், வால்பாறை அரசு மருத்துவமனை தலைமை மருத்துவ அதிகாரி டாக்டர். ஆனந்தன் ஆகியோர் சிறப்புரை ஆற்றினர்.



இந்நிகழ்ச்சியில், வழக்கறிஞர்கள் பால்பாண்டி, சுமதி, வினோத்குமார், அன்பு நாகராஜன் உள்ளிட்ட பல நீதிமன்ற அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

முன்னதாக, இந்நிகழ்ச்சியில் நீதிபதி ஆறுமுகம் பேசுகையில், பொதுமக்கள் தங்களது பிரச்சனைகளுக்கு இலவசமாக நீதிமன்றத்தை நாடி சட்ட ஆலோசனைகள் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவித்தார். இதைத்தொடர்ந்து, சட்டமேதை டாக்டர் அம்பேத்கர் குறித்து பேசினார்.

இதனைத்தொடர்ந்து, முகாமில் பெரும்பாலான பொதுமக்கள் கலந்து கொண்டு மனுக்கள் அளித்தனர்.

Newsletter

சிங்கப்பூர் நிறுவனத்துடன் ஸ்ரீ ராமகிருஷ்ணா கல்லூரி புரிந்துணர்வு ஒப்பந்தம்

கோவை நவஇந்தியாவில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா கலை மற்றும் அறிவியல் கல்லூரி, சிங்கப்பூர் நிறுவனமான iGenius AI Private Limited...

பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு; மழை விளைவுகள் சீரமைப்பு பணிகள் ஆய்வு

கோயம்புத்தூர் சிங்காநல்லூர் தொகுதி 27-வது வார்டு பீளமேடு பகுதியில் குடிநீர் குழாய் உடைப்பு ஏற்பட்டது. மழையினால் விழுந்த...

முதல்வர் விஜய் - எஸ்.பி. வேலுமணி, சி.வி. சண்முகம் சந்திப்பு

அதிமுக முன்னாள் அமைச்சர்களான எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி. சண்முகத்தை முதல்வர் விஜய் நேரில் சந்தித்தது தமிழக அரசியல் வட...

ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் சர்வதேச செவிலியர் தினம் 2026 சிறப்பாக கொண்டாடப்பட்டது

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் மே 12, 2026 அன்று சர்வதேச செவிலியர் தினம் சிறப்பாக கொண்டாடப்பட்டது...

சென்னை - கோவை இடையே கோடை சிறப்பு ரயில்கள் இயக்கம்

கோடை விடுமுறையில் அதிகரித்த பயணிகள் தேவையை கருத்தில் கொண்டு, தெற்கு ரயில்வே மே 2026ல் சேலம், ஈரோடு, திருப்பூர் வழியாக செ...

பிரதமர் மோடியின் தங்க வாங்காதீர்கள் அறிவுறுத்தல்: 5 கோடி பேரின் வாழ்வாதாரம் ஆபத்தில் - நகை தயாரிப்பாளர்கள் எச்சரிக்கை

பிரதமர் Narendra Modi தங்கம் வாங்குவதை ஒரு ஆண்டு தவிர்க்குமாறு அறிவுறுத்தியதால் நாடு முழுவதும் தங்க நகைத் தொழிலில் ஈடுபட...