மாற்றுத் திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்க அரசு ஆரம்ப சுகாதார நிலையங்களில் பிசியோதெரபி மருத்துவர்களை நியமிக்க வேண்டும் - கோயமுத்தூர் பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் வேண்டுகோள் .


உலகம் முழுவதும் இன்று மாற்றுத் திறனாளிகள் தினம் அனுசரிக்கப்படுகிறது. அதனையொட்டி கோயமுத்தூர் பிசியோதெரபி மருத்துவர்கள் சங்கம் சார்பில் வெளியிடப்பட்ட அறிக்கையில் கூறியிருப்பதாவது:

மாற்றுத் திறனாளிகள் மறுவாழ்வு அளிக்க  தமிழக அரசு ஓவ்வொரு ஆரம்ப சுகாதார நிலத்திலும் குறைந்த பட்சம் ஒரு பிசியோதெரபி மருத்துவரை நியமிக்க வேண்டும். 

கடந்த 2011 ஆண்டு மாற்றுத் திறனாளிகள் கணக்கெடுப்பின் படி இந்தியாவில் 5,436,604 பேரும் இதில் தமிழகத்தில் 287241 பேரும் கை, கால் இழப்பு அல்லது செயலிழப்பினால் உடல் ஊனம் அடைந்தவர்கள் என கண்டறியப்பட்டுள்ளனர். இதில் பிறக்கும் போதே ஏற்படும் உடல் ஊனத்தால் பாதிக்கப்பட்டவர்கள் மிக அதிகம். பிறப்பு ஊனத்தை ஆரம்ப காலத்தில் கண்டறிந்து அவர்களுக்கு பிசியோதெரபி சிகிச்சை அளிக்கப்பதன் மூலமாக குணப்படுத்த முடியும். அதேபோல் விபத்தினால் ஏற்படும் மூளை பாதிப்பு, முதுகு தண்டுவட பாதிப்பு, கை மற்றும் கால் இழப்பு போன்றவற்றால் ஏற்படும் உடல் ஊனத்தையும் பிசியோதெரபி மருத்துவதின் மூலம் அவர்களின் மாற்று திறனை மேம்படுத்தி மற்றவர்களை போல் இயல்பு வாழ்க்கையை வாழ செய்ய முடியும். இவ்வாறு மாற்று திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்கும் பிசியோதெரபி மருத்துவர்களை ஓவ்வொரு ஆரம்ப சுகாதார நிலையங்களிளும் நியமிப்பதன் மூலம் மாற்றுத் திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்க முடியும். 

பிறப்பு ஊனத்தை தடுக்க தமிழக அரசு பொது மக்களிடம் ஊனத்திற்கான காரணம் குறித்தும் அதனை தடுக்கும் வழிமுறைகள் குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்த வேண்டும். 

மாற்றுத் திறனாளிகளுக்கு மறுவாழ்வு அளிக்க அனைத்து மாவட்டங்களிலும் பிசியோதெரபி மருத்துவர்கள் தலைமையில் மறுவாழ்வு மையம் அமைக்க படவேண்டும்.

மாற்றுத் திறனாளிகளின் விளையாட்டு திறமைகளை ஊக்கபடுத்த அனைத்து மாவட்டங்களிலும் மாற்றுதிறனாளிகளுக்கான தனி விளையாட்டு மைதானம் அமைக்க வேண்டும்.அதில் மாற்றுத் திறனாளிகளை அவர்கள் விரும்பும்  விளையாட்டுக்கு ஏற்றால் போல் உடலை தகுதி படுத்த பிசியோதெரபி மருத்துவர்களை நியமிக்க வேண்டும். 

இதன் மூலம் கடந்த ரியோ பாரா ஒலிம்பிக்கில் தங்க பதக்கம் வென்ற திரு.மாரியப்பன் அவர்களை போன்ற  சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்க முடியும். இவ்வாறு கோயமுத்தூர் பிசியோதெரபி மருத்துவர்கள் சங்க செயலாளர் டாக்டர். ராஜேஸ் கண்ணா கூறியுள்ளார்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...