கோவையில் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான கிரிக்கெட் போட்டி




உலக மாற்று திறனாளிகள் தினம் இன்று கொண்டாடப்படுகிறது. இதன் ஒரு பகுதியாக கோவை பங்கஜா மில்ஸ் மைதானத்தில் பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான மண்டல அளவிலான கிரிக்கெட்  போட்டி நடைபெற்று வருகிறது. இதில் கரூர், ஈரோடு, சேலம், தஞ்சாவூர், திருச்சி, மதுரை, விருதுநகர், தேனி, கோவை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த வீரர்கள்  பங்கேற்கின்றனர். 

இரண்டு நாட்கள் நடைபெறும் இப்போட்டிகள் லீக் சுற்று முறையில் நடக்கிறது. ஒவ்வொரு அணியும் 20 ஓவர்கள் விளையாடுவர். இதில் அதிக புள்ளிகள் பெறும் அணிகள் நாளை நடைபெறும் இறுதி போட்டியில் விளையாடும் எனவும், இறுதி போட்டியில் வெற்றி பெறும் அணி மாநில அளவிலான பார்வை குறைபாடு உள்ளவர்களுக்கான அணியில் கலந்து கொள்ளும் என போட்டி ஒருங்கினைப்பாளர்கள் தெரிவித்தனர். 



மேலும் இப்போட்டியில் பங்கேற்பவர்கள்  100 சதவீதம் பார்வை குறைபாடு உள்ளவர்கள், 60 சதவீதம் மற்றும் 40 சதவீதம் பார்வை குறைபாடு உள்ளவர்கள் என 3 பிரிவுகளாக ஒவ்வொரு போட்டிகளிலும் 14 வீரர்கள்  பங்கேற்பார்கள் எனவும் தெரிவித்தனர். ஒலி எழுப்பும் பிளாஸ்டிக் பந்துகள் இப்போட்டிக்கு உபயோகிக்க  படுவதாக தெரிவித்தவர்கள் இந்த போட்டிக்கான ஏற்பாடுகளை பரஸ்பரம் தனியார் தொண்டு நிறுவனம் சுடர் ஒளி மற்றும் தமிழ்நாடு பார்வையற்றோர் கழகம் ஏற்பாடு செய்துள்ளதாக தெரிவித்தனர்.நாளை மாலை இறுதி போட்டிக்கு பின்னர் வெற்றி பெற்ற அணிகளுக்கான பரிசளிப்பு விழா நடைபெறுகிறது.

Newsletter

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...

கோவை ஆர்.எஸ்.புரத்தில் சரக்கு வாகனம் மீது மரம் சாய்ந்து விபத்து – ஒருவர் படுகாயம்.

ஆர்.எஸ்.புரம் மெக்கரிக்கர் சாலையில் பழமையான மரம் திடீரென சரிந்து சரக்கு வாகனத்தின் மீது விழுந்ததில் ஓட்டுநர் படுகாயமடைந்...