கார் மீது இருசக்கர வாகனம் மோதிய விபத்தில் 3 மாணவர்கள் பரிதாப பலி

கிருஷ்ணகிரி மாவட்டம் மல்லவாடி பகுதியை சேர்ந்தவர் சூரியன் (21). இவர் கோவையில் உள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் படித்துவந்தார். இந்த நிலையில் நேற்று, இவர் தனது நண்பர்களான இளங்கோ மற்றும் கவுசிக் என்ற இருவருடன் இருசக்கர வாகனத்தில் கொடிசியா நோக்கி சென்றார். அப்போது அவிநாசி சாலையில் வந்த கார் சூரியன் ஓட்டி வந்த வாகனத்தின் மீது மோதியது. இந்த விபத்தில் மூவரும் தூக்கியெறியப்பட்டனர். படுகாயம் அடைந்த மூவரும் பரிதாபமாக உயிரிழந்தனர்.

மேலும், அவர்கள் வந்த வாகனம் தீப்பிடித்தது. சம்பவம் அறிந்து வந்த பீளமேடு போலீசார் மற்றும் தீயணைப்பு வீரர்கள் தீயை அணைத்தனர். பின்னர், மாணவர்களின் உடலை மீட்ட போலீசார் கோவை அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினார். தொடர்ந்து காரை ஓட்டிவந்த தர்மபுரி மாவட்டத்தை சேர்ந்த பரத் (26) என்பவரிடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...