கல்லூரி பேராசிரியர் வீட்டில் 50 சவரன் நகை கொள்ளை

கோவை அரசு தொழில் நுட்பக்கல்லூரியில் பேராசிரியராக பணிபுரிபவர் சேகர். இவரது மனைவி ராணி. இவர்கள் கல்லூரி வளாகத்தில் உள்ள அரசு குடியிருப்பில் வசித்து வருகின்றனர். இந்த நிலையில், கடந்த நவம்பர் மாதம் 27 ம் தேதி திண்டிவனத்தில் உள்ள உறவினர் இறந்ததால் சேகர் தனது குடும்பத்தோடு திண்டிவனம் புறப்பட்டுசென்றார்.  

தொடர்ந்து, இன்று காலை சேகர் மட்டும் வீடு திரும்பினார். அப்போது, வீட்டின் கதவு திறந்து கிடந்ததது. இதை கண்டு அதிர்ச்சியடைந்த சேகர் உள்ளே சென்று பார்த்த போது பீரோவில் இருந்த 50 சவரன் நகைகள் கொள்ளையடிக்கப்பட்டது தெரியவந்தது.   

இது தொடர்பாக, சாய்பாபா காலனி போலீசாருக்கு தகவல் தெரிக்கப்பட்டது. தகவலின் பேரில், சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் மோப்ப நாய்கள் மற்றும் கை ரேகை நிபுணர்களின் உதவியோடு தகவல்களை சேகரித்தனர். 

 இது குறித்து வழக்கு பதிவு செய்த போலீசார் கொள்ளையில் ஈடுபட்ட மர்ம நபர்களை தேடி வருகின்றனர். 

இது தொடர்பாக காவல் துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘பல நாட்கள் நோட்டமிட்ட பின்னரே இந்த கொள்ளைச் சம்பவம் நடைபெற்றுள்ளது. கல்லூரி வளாகத்தில் பொருத்தப்பட்டிருக்கும் கண்காணிப்பு காமிராக்களில் பதிவான காட்சிகளை கொண்டு விசாரணை நடத்தி வருகிறோம்’ என்றார். 

அரசு குடியிருப்பு பகுதிக்குள் புகுந்து 50 சவரன் நகை கொள்ளையடித்த சம்பவம் அப்பகுதியினரிடையே  பெரும் பீதியை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

மின்சார சலுகை உள்ளிட்ட வாக்குறுதிகளை விரைந்து நிறைவேற்ற தமிழக அரசுக்கு நெசவாளர்கள் கூட்டமைப்பு கோரிக்கை

தமிழ்நாடு நெசவாளர்கள் சங்கங்களின் கூட்டமைப்பு, தேர்தல் காலத்தில் தமிழக வெற்றி கழகம் அளித்த மின்சார சலுகை, ஆயுள் காப்பீடு...

பம்ப்செட் ஜிஎஸ்டி வரி 5 சதவீதமாக குறைக்க தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் - பம்ப் உற்பத்தியாளர்கள் கோரிக்கை

கோவையில் பம்ப் உற்பத்தியாளர்கள் சங்கம், மோட்டார் பம்ப்செட் பொருட்களுக்கான ஜிஎஸ்டி வரியை 18 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமா...

அரசாணை இருந்தும் தலைவர்களின் புகைப்படங்களை  புறக்கணிப்பதா? - மறுமலர்ச்சி மக்கள் இயக்கம் சார்பில் மனு

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் தந்தை பெரியார், பேரறிஞர் அண்ணா மற்றும் டாக்டர் பி.ஆர். அம்பேத்கர் ஆகியோரின் புகைப்படங்...

கவுண்டம்பாளையம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினராக கனிமொழி சந்தோஷ் பதவியேற்பு

தமிழக சட்டப்பேரவையின் 17-வது கூட்டத்தொடரில் கோவை மாவட்டம் கவுண்டம்பாளையம் தொகுதியில் தவெக சார்பில் வெற்றி பெற்ற கனிமொழி...

கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் புதிய முதல்வர் விஜய் புகைப்படங்கள் நிறுவப்பட்டன

தமிழகத்தின் 13வது முதல்வராக பொறுப்பேற்ற விஜய், கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பழைய புகைப்படங்கள் அகற்றப்பட்டு புதிய ம...