ஜெயலலிதா உயிரிழந்ததை பயன்படுத்தி தமிழகத்தில் பா.ஜ.க காலூன்ற முயற்சிக்கிறது என எஸ்.டி.பி.ஐ மாநில தலைவர் குற்றச்சாட்டு

தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா மறைவை அடுத்து ஏற்படுள்ள வெற்றிடத்தை பயன்படுத்தி தமிழகத்தில் பா.ஜ.க காலூன்ற முயற்சிப்பதாக எஸ்.டி.பி.ஐ கட்சியின் மாநிலத் தலைவர் தெளகலான் பாகவி குற்றம்சாட்டியுள்ளார்.

சோசியல் டெமாக்ரடிக் பார்ட்டி ஆப் இந்தியா கட்சியின் மாநில செயற்குழுக் கூட்டம் கோவையில் நடைபெற்றது. இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய அக்கட்சியின் மாநில தலைவர் தெளகலான் பாகவி, மறைந்த தமிழக முதலமைச்சர் ஜெயலலிதாவிற்கு இரங்கல் தெரிவித்தார். 

அ.தி.மு.க கட்சியில் அடுத்த பொதுச்செயலாளர் தேர்வு செய்யப்படுவது உட்கட்சி விவகாரம் எனவும், அது குறித்து மற்றவர்கள் கருத்து சொல்ல தேவையில்லை எனவும் அவர் தெரிவித்தார். மேலும், ஜெயலலிதா மறைவிற்கு பின் ஏற்பட்டுள்ள வெற்றிட்டத்தை பயன்படுத்தி பா.ஜ.க தமிழகத்தில் காலூன்ற முயற்சிப்பதாகவும், அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளர் மற்றும் தமிழக முதல்வர் ஒ.பன்னீர்செல்வம் கவனத்துடன் செயல்பட வேண்டுமெனவும் தெளகலான் பாகவி தெரிவித்தார்.

பணம் மதிப்பிழப்பு விவகாரத்தில் மத்திய அரசு சாதாரண ஏழை மக்கள் மீது அறிவிக்கப்படாத போரை தொடுத்து இருப்பதாகவும், 35 நாட்களுக்கு மேலாகியும் மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருவது மத்திய அரசு தோல்வியடைந்து இருப்பதை வெளிப்படுத்துவதாக உள்ளதாகவும்  அவர் தெரிவித்தார். 

வர்தா புயல் நடவடிக்கைகளில் தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு இருப்பதாக கூறிய அவர், தமிழகம் முழுவதும் உள்ள நீர்நிலை ஆக்கிரமிப்புகளை அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டுமென வலியுறுத்தினார். கோவையில் இந்து முன்னணி பிரமுகர் சசிகுமார் கொலையை தொடர்ந்து ஏற்பட்ட வன்முறையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மாவட்ட நிர்வாகம் மற்றும் மாநில அரசு நிவாரணம் வழங்க வேண்டுமெனவும், அக்கொலையில் தொடர்புடைய உண்மையான குற்றவாளிகளை கண்டறிந்து நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் தெளகலான் பாகவி வலியுறுத்தினார்.

Newsletter

புதிய அரசு அமைப்பதற்கான நடவடிக்கைகளை ஆளுநர் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் - திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் அறிக்கை

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகள் வெளியான நிலையில், மக்கள் தேர்வு செய்த அரசு அமைய வேண்டியது காலத்தின் கட்டாயம் மட்ட...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...