பாரதியார் பல்கலை-யில் பேராசிரியர் பணி நியமனத்தில் நடந்த முறைகேடுகள் குறித்து நடவடிக்கை கோரி அப்பல்கலை கழக பட்டதாரிகள் மனு

கோவை மருதமலை சாலையில் உள்ள பாரதியார் பல்கலைகழகத்தில் பேராசிரியர் பணி நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்துள்ளதாக புகார்கள் குவிந்து வருகின்றன. இந்நிலையில், பேராசிரியர் பணி நியமனத்தில் முறைகேடுகள் நடந்தது தொடர்பாக விசாரணை மேற்கொண்டு நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, அப்பல்கலைக் கழக முன்னாள் முதுகலை மற்றும் ஆராய்ச்சி பட்டதாரிகள் மாவட்ட ஆட்சியரிடம் புகார் மனு அளித்தனர். 



இதுகுறித்து அவர்கள் தெரிவிக்கையில், பாரதியார் பல்கலைக் கழகத்தில் 76 பேராசிரியர் பணி நியமனத்தில் பல்வேறு முறைகேடுகள் நடந்து உள்ளதாகவும், இட ஒதுக்கீடு முறையாக பின்பற்றப்படவில்லை எனவும், கோடிக்கணக்கான ரூபாய் அளவில் ஊழல் நடந்து இருப்பதாகவும் பாரதியார் பல்கலை கழக பட்டதாரிகள் புகார் தெரிவித்தனர். 

மேலும், துறைக்கு சம்மந்தமில்லாதவர்களிடமும், தகுதியற்ற நபர்களிடமும் 35 முதல் 60 லட்சம் ரூபாய் வரை லஞ்சம் பெற்றுக் கொண்டு பணி நியமனம் செய்து இருப்பதாகவும், இந்த முறைகேடுகள் தொடர்பாக பலமுறை புகார் அளித்தும் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை எனவும் அவர்கள் தெரிவித்தனர். 



இது தொடர்பாக புகார் அளிப்பவர்கள் மிரட்டப்படுவதாகவும் கூறிய பட்டதாரிகள், தகுதியான நபர்களை நியமிக்கவில்லை எனில் தங்களது முனைவர் பட்டத்தை திரும்ப ஒப்படைக்க உள்ளதாக தெரிவித்துள்ளனர்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...