கழிவுகளை நொய்யல் ஆற்றில் கலக்கும் முயற்சி முறியடிப்பு

கோவை போத்தனூரை அடுத்த சாய் நகர் பகுதியில் 300க்கும் மேற்பட்ட குடியிருப்புகள் உள்ளன. அதே பகுதியில் 'பேரிலேண்ட் - சாய் அமரந்தா' என்ற தனியார் குடியிருப்பு உள்ளது. இங்கு  130 வீடுகள் உள்ளன. இங்கிருந்து வெளியேறும் கழிவுகளை நொய்யல் ஆற்றில் கலக்க முயற்சி செய்ததாக கூறப்படுகிறது.



இது குறித்து சாய் நகர் குடியிருப்போர் நலச்சங்கத்தின் செயலாளர் கலா கூறியதாவது :-

எங்கள் பகுதியின் ஓரத்தில் உள்ள சாலையில் சாய் அமரந்தா அடுக்குமாடி குடியிருப்பை சேர்ந்தோர் தனியாக குழி தோண்டினர். மேலும், குடியிருப்பின் கழிவுகளை அரை கிலோமீட்டர் தொலைவில் உள்ள நொய்யல் ஆற்றில் விட இருப்பதாக கூறினர். இது குறித்து, கோவை மாநகராட்சிக்கு புகார் அளித்தோம். புகாரின் பேரில் எங்கள் பகுதி உதவி பொறியாளர் கவிதா அந்த இடத்திற்கு வந்து ஆய்வு செய்தார்.   மேலும்,போத்தனூர் போலீசாரும் வந்தனர். தொடர்ந்து, உதவி பொறியாளர் கவிதா, குடிருப்பு நிர்வாகத்தினர் தோண்டிய குழியை உடனடியாக மூட வேண்டும் என்று உத்தரவிட்டார். 



இதை தொடர்ந்து அவர்களின் முயற்சி முறியடிக்கப்பட்டது. நொய்யல் ஆற்றங்கரை தான் எங்களுக்கு வாழ்வாதாரம். இங்கு உள்ள பல வீடுகளில் போர் போட்டு தண்ணீர் எடுத்து பயன்படுத்துகிறோம். இது போன்று, கழிவு நீரை நொய்யல் நதியில் செலுத்துவதால் மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கும். இது போன்ற செயல்களை செய்பவர்கள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.

Newsletter

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...

கோயம்புத்தூர் ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையில் உலக கை சுகாதார தினம் 2026 சிறப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கோயம்புத்தூரில் உள்ள ஸ்ரீ ராமகிருஷ்ணா மருத்துவமனையின் நோய் தொற்று கட்டுப்பாட்டு துறை சார்பில் உலக கை சுகாதார தினம் 2026-...