கிறிஸ்துமஸ் கொண்டாட்டம்: ஏசுகிறிஸ்து வாழ்க்கை வரலாறு குறித்து அவினாசிலிங்கம் பல்கலை கழக மாணவிகள் நாடகம் நடத்தினர்


கோவை அவினாசிலிங்கம் பல்கலைக்கழகத்தில் கிறிஸ்துமஸ் பண்டிகையை முன்னிட்டு ஆசிரியர்கள், மாணவிகள் இணைந்து கிறிஸ்துமஸ் கொண்டாடினர். இதில், ஏசு பிறப்பு உள்ளிட்ட அவரது வாழ்க்கை குறித்து நாடக நிகழ்ச்சி நடைபெற்றது. மாணவர்களின் தத்ரூபமான நாடகம் அங்கிருந்தோரை வெகுவாக கவர்ந்தது.



இந்நிகழ்ச்சியில், பொருளியல் துறை பேராசிரியர் முனைவர் ஷேர்லி தாமஸ் வரவேற்புரையாற்றினார். அவினாசிலிங்கம் கல்வி நிறுவனத்தின் வேந்தர் முனைவர் பி.ஆர்.கிருஷ்ணகுமார் தலைமையுரையாற்றினார்.

அப்போது அவர் கூறுகையில், கிறிஸ்துமஸ் விழா என்பது சாதிமத பேதமின்றி அனைவரும் ஒற்றுமையுடன் கொண்டாடப்படுகின்ற விழாவாக அமைகின்றது. அறியாமை, மூடநம்பிக்கை, பேராசை, வெறுப்புணர்ச்சி போன்றவைகளை அகற்றுவதற்காக தெய்வ அவதாரமாகிய ஏசுகிறிஸ்து இந்த பூமியில் அவதரித்தார் என்றும், உலகம் முழுவதும் ஆன்மீக ஒளியை பரப்புவதற்காக கிறிஸ்துமஸ் விழா இசை நிகழ்ச்சிகளுடன் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டு உற்சாகமாக கொண்டாடப்படுகிறது என்றும் எடுத்துரைத்தார்.



இதைத்தொடர்ந்து, கோவை இன்டச் ஃபெல்லோசிப் இன்டர்நேசனல் முதன்மை பாஸ்டர் எம்.அருமைநாயகம் மாணவர்களிடையே சிறப்புரையாற்றினார். அப்போது மாணவர்களின் ஏசுபிறப்பு நாடகம் தத்ரூபமாகவும் மகிழ்ச்சியளிப்பதாக இருந்ததாகவும் பாராட்டு தெரிவித்தார்.



இதைத்தொடர்ந்து, அவினாசிலிங்கம் கல்வி நிறுவனத்தின் துணை வேந்தர் முனைவர் பிரேமாவதி விஜயன் கிறிஸ்துமஸ் விழாவின் சிறப்புகள் குறித்து எடுத்துரைத்து வாழ்த்துரை வழங்கினார். விழாவின் முக்கிய நிகழ்வாக கிறிஸ்துமஸ் தாத்தா அனைவருக்கும் பரிசுகள் மற்றும் இனிப்புகள் வழங்கி மகிழ்வித்தார். நிறைவாக பேராசிரியர் முனைவர் வசந்தகல்யாணி நன்றியுரை வழங்கினார்.





Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...