ஸ்வச் சர்வேக்ஷன் 2017 மற்றும் ஸ்வச்சதா செயலி குறித்து மாணவ மாணவிகளுடன் மாநகராட்சி ஆணையர் கலந்துரையாடல்


கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் ஸ்வச்சர்வேக்ஷன் 2017 மற்றும் ஸ்வச்சதா செயலி குறித்து கல்லூரி மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார்.

கோவை மாநகராட்சி ஆணையர் அலுவலகத்தில் இன்று கோவை மாநகராட்சி ஆணையரும் தனி அலுவலருமான க.விஜயகார்த்திகேயன் பல கல்வி நிறுவனங்களில் இருந்து வந்திருந்த மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடலில் ஈடுபட்டார். இதில், ஸ்வச் சர்வேக்ஷன் 2017 மற்றும் ஸ்வச்சதா செயலி குறித்து மாணவ, மாணவிகளுக்கு எடுத்துரைத்தார். 



மாணவர்களின் மூலமாக ஸ்வச் பாரத் திட்டத்தினை அதிகளவில் பொதுமக்களிடம் எடுத்துச் செல்லமுடியும் என்பதில் எவ்வித மாற்றுக்கருத்தும் இல்லை. இதன் மூலம் மாநகராட்சியுடன் மக்கள் ஒத்துழைப்பு தந்து அதிகபட்ச சுகாதாரத்தினை அடைய முடியும். இது ஸ்வச் சர்வேக்ஷன் 2017 விருதினை பெறவும் வழிவக்கும்.

மத்திய நகர்ப்புற  அமைச்சகத்தின் மூலம் ஸ்வச்பாரத் திட்டத்தின் கீழ் ஸ்வச்சர்வேக்ஷன் என்ற கணக்கெடுப்பு நடத்தப்பட உள்ளது. இந்த கணக்கெடுப்பில் சுகதார அளவுகள் மற்றும் அதற்கான உள்ளாட்சி  அமைப்புகளால் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் கருத்தில் கொள்ளப்படும்.

கோவை மாநகராட்சி இந்த செயலியை பயன்படுத்துவது குறித்து பல்வேறு வழிகளில் விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறது. இதற்காக நகரங்களில் தன்னார்வலர் அமைப்புகளுடன் இணைந்து செயல்பட்டு வருகிறது. ஸ்வச்சதா செயலி மூலம் மக்கள் தங்கள் பகுதியில் ஏற்பட்டுள்ள சுகாதார சீர்கேடுகள் குறித்து புகார் தெரிவித்தால் 2 மணி நேரத்தில் அது குறித்து நடவடிக்கை எடுக்கப்படும்.

Newsletter

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...