இருசக்கர வாகன ஓட்டிகளை பெரிதும் கவரும் வகையில் எம்.ஆர்.எப் "மசஸ்டர்டயர்" அறிமுகம்

இந்தியாவின் மிகப் பெரிய டயர் உற்பத்தி நிறுவனமான  எம்.ஆர்.எப்  ''மசஸ்டர்டயர்'' என்னும் இருசக்கர வாகனத்திற்கான நிகழ்ச்சியை நடத்தியது. மசஸ்டர்டயர் என்பது இருசக்கர வாகனங்களை சாலையில் நேர்த்தியாக இயக்குவது ஆகும். அதற்கு வாகனத்தின் டயர் மிகவும் கட்சிதமாக இருக்க வேண்டும். இந்நிகழ்ச்சியில், மசஸ்டர்டயர் இயக்குவதில் நேர்த்திபெற்றவர்கள் பஙகேற்று  எம்.ஆர்.எப்  டயரின் தொழில்நுட்பம் மற்றும் எவ்வித சாலையிலும் இயக்கத்தகுந்த  எம்.ஆர்.எப்  டயரை சோதனையிட்டனர்.

இவ்விழாவில்  எம்.ஆர்.எப்  லிமிட்டெட் விற்பனை நிர்வாக துணைத் தலைவர் கொஷி வர்கீஸ் பேசியதாவது:-

மக்களுக்கு மசஸ்டர் குறித்து அடிப்படை அறிவும், அனுபவமும் இருந்தால் மட்டுமே அதனை சரியான முறையில் இயக்க முடியும். டயரின் திறன், தன்மை மற்றும் தொழில் நுட்பம் ஆகியவை மசஸ்டர்க்கு மிக முக்கியம். சரியான பாதை, திறன்மிக்க டயர், அனுபவங்கள் இருப்பின் இந்த பயணம் மிக  நன்றாக அமையும். மேலும், இதில் ஈடுபடுபவர் தகுந்த பாதுகாப்புடன் ஈடுபட வேண்டும்'' என்றார்.

மசஸ்டர் டயர் இருசக்கர வாகனங்களுக்கு என பிரத்யேகமாக தயாரிக்கப்பட்டுள்ளது. இருசக்கர வாகனத்தில் 150 சிசி மற்றும் அதற்கு மேலே உள்ள திறன்கொண்ட இருசக்கர வாகனத்தில் மட்டுமே இது சரியான முறையில் இயங்கும். இந்த டயர் ஒரு மென்மையான கலவை மற்றும் விசேஷமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. கடுமையான சாலையினையும் இந்த வகை டயர்கள் எளிதாக கடக்கும். செங்குத்தான வளைவுகளில் செல்லவும் இது சிறப்பாக உதவும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.

இந்நிகழ்ச்சியில், எம்.ஆர்.எப் டயர் சோதனைக் குழு மசஸ்டர் டயரினை அறிமுகம் செய்து அதன் சிறப்புகளை எடுத்துரைத்தனர். அப்போது மசஸ்டர் டயர் ஓட்டுநர்களுக்கு ஒரு புதுவித அனுபவத்தை தரும் எனவும், பல்வேறு தொழில்நுட்பங்களால் தயாரிக்கப்பட்டுள்ள மசஸ்டர் டயர் வாகன ஓட்டிகளுக்கு மகிழ்ச்சியளிக்கும் என்றும் பேசினர். தொடர்ந்து, இதன் தயாரிப்பில் மேற்கொள்ளப்பட்ட வழிமுறைகள், தொழில்நுட்பம், வடிவமைப்பு உள்ளிட்டவை குறித்து கலந்துரையாடல் நடைபெற்றது.

Newsletter

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் சிறுதானிய மதிப்பூட்டப்பட்ட உணவுப்பொருட்கள் தயாரிப்பு பயிற்சி

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகம், Coimbatore-ல் சிறுதானியங்களான கேழ்வரகு, கம்பு, சோளம், சாமை, தினை, பனிவரகு ஆகியவற்றில...

தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தில் அங்கக வேளாண்மை பயிற்சி மே 13ல் நடைபெறுகிறது

கோவையில் உள்ள தமிழ்நாடு வேளாண்மைப் பல்கலைக்கழகத்தின் நம்மாழ்வார் இயற்கை வேளாண்மை ஆராய்ச்சி மையத்தில் மே 13ல் அங்கக வேளாண...

Wild Elephant Electrocuted in Coimbatore; Severe Burn Injuries on Trunk Raise Safety Concerns

A male wild elephant, estimated to be around 25 years old, was found dead after an apparent electrocution incident at a...

கோவையில் மின்சாரம் தாக்கி ஆண் காட்டு யானை உயிரிழப்பு : தும்பிக்கை கருகிய நிலையில் மீட்பு.

மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட கரடிமடை பகுதியில் உள்ள தனியார் தோட்டத்தில், சுமார் 25 வயது மதிக்கத்தக்க ஆண் காட்டு யானை...

கோவை மாவட்டத்தில் தேர்தல் விழிப்புணர்வுக்கு பாராட்டு விழா: ஆட்சியர் விருது வழங்கினார்

கோவை IMA ஹாலில் நேற்று நடைபெற்ற பாராட்டு விழாவில், 2026 தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் வாக்காளர் விழிப்புணர்வு பணியில் ச...

கோவை நீதிமன்றங்களுக்கு மே 31 வரை கோடை விடுமுறை - Madras High Court உத்தரவு

கோடை காலத்தை முன்னிட்டு Madras High Court கோவை மாவட்ட நீதிமன்றங்களுக்கு மே 31 வரை விடுமுறை அறிவித்துள்ளது. விடுமுறை காலத...