மாநகராட்சி ஆணையர் உத்தரவால் அதிக கட்டணம் வசூலித்த நவீன கட்டண கழிப்பிட குத்தகைதாரர்க்கு அபராதம்

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில் மத்திய மண்டலத்திற்குட்பட்ட அரசு பொது மருத்துவமணை எதிரில் செயல்பட்டு வரும் நவீன கட்டண கழிப்பிடத்திற்கு அதிக கட்டணம் வசூல் செய்த குத்தகைதாரர்கள் மீது அபராதம் விதித்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

கோவை மாநகராட்சி ஆணையர் மற்றும் தனி அலுவலர் க.விஜயகார்த்திகேயன் உத்தரவின் பேரில், உதவி வருவாய் அலுவலர் தலைமையில் மத்திய மண்டலத்திற்குட்பட்ட 73-வது வார்டு திருச்சி சாலை, அரசு பொது மருத்துவமணை எதிரில் செயல்பட்டு வரும் மாநகராட்சி நவீன கட்டண கழிப்பிடத்தில் கடந்த டிசம்பர் 23ம் தேதியன்று ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

இந்த ஆய்வின் போது, குத்தகைதாரர் வி.கே.ரஹமதுல்லா என்பவரின் வசூல் செய்யும் பணியாளர்கள் ஏல விதிமுறைப்படி மாநகராட்சி நவீன கட்டண கழிப்பிடத்தின் ரூ.1 கட்டணம் வசூல் செய்யாமல், அதற்கு பதிலாக ரூ.3 கூடுதல் கட்டணம் வசூல் செய்தது ஆய்வில் கண்டறியப்பட்டது. 

இதைத்தொடர்ந்து, மாநகராட்சிக்கு அவப்பெயரை ஏற்படுத்தி, மாநகராட்சி பொது ஏல விதிமுறைகளை மீறி செயல்பட்ட குத்தகைதாரர் வி.கே.ரஹமதுல்லா என்பவரை இறுதியாக எச்சரிக்கை செய்து, அபராதத் தொகையாக ரூ.10,000 விதிக்கப்பட்டது.

Newsletter

கோவை வடக்கு வாக்காளர்களுக்கு BJP வேட்பாளர் வானதி சீனிவாசன் நன்றி

கோவை வடக்கு தொகுதியில் தேசிய ஜனநாயகக் கூட்டணி BJP வேட்பாளராக போட்டியிட்ட வானதி சீனிவாசன், தனக்கு வாக்களித்த அனைவருக்கும்...

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...