பிரபல தங்க நகைக் கடையில் வருமான வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை

கோவை, அசோக் நகர் பகுதியைச் சேர்ந்தவர் சிவகுமார். இவர் ராஜவீதி பகுதியில் முத்ரா ஜுவல்லர்ஸ் என்ற பெயரில் தங்கநகைக் கடை மற்றும் முத்ரா புல்லியன்ஸ் என்ற பெயரில் தங்கக்கட்டி விற்பனையும் செய்து வருகிறார். 

இந்த நிலையில் சிவகுமார் முறையாக வருமான வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பில் ஈடுபட்டுள்ளதாக வருமானவரித் துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதன் பேரில் 6 பேர் கொண்ட வருமான வரித்துறை அதிகாரிகள் குழுவினர் சிவகுமாரின் கடையில் திடீர் சோதனையில் ஈடுபட்டனர்.

சுமார் 2 மணி நேரம் நடைபெற்ற இந்த சோதனையின் போது, வியாபாரம், பணபரிவர்த்தனை உள்ளிட்டவை தொடர்பாக அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டுள்ளனர். மேலும் வருமான வரித்துறை சோதனைக்குப் பின் வரி செலுத்தியது மற்றும் தங்கம் விற்பனை தொடர்பான ரசீதுகள் உள்ளிட்ட சில முக்கிய ஆவணங்களை அதிகாரிகள் கொண்டு சென்றதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

ஆனால், அங்கு சோதனை எதுவும் நடத்தப்படவில்லை எனவும், வருமான வரி தொடர்பான விசாரணை மட்டுமே நடத்தப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தெரிவித்தனர்.

சமீபத்தில் சேகர்ரெட்டி, முன்னாள் தமிழக தலைமை செயலாளர் ராமமோகன ராவ் வீடுகளில் வருமான வரித்துறை சோதனை நடத்திய நிலையில், கோவையில் தங்க நகை கடையில் சோதனை நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Newsletter

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...