எஸ்ஆர்ஐடி வணிகவியல் கல்லூரியின் சார்பில் மேலாண்மை திறன் வளர்ச்சி குறித்து ஒரு நாள் பயிற்சி முகாம்


எஸ்ஆர்ஐடி வணிகவியல் கல்லூரி சார்பில் ஒரு நாள் மேலாண்மை திறன் வளர்ச்சிக்கான பயிற்சியை ஜனவரி 25ம் தேதி வழங்கப்படவுள்ளது. இதில், இறுதியாண்டு படிக்கும் கலை அறிவியல் மற்றும் வணிகவியல் பாடப்பிரிவில் இளங்களை பட்டப் படிப்பு பயிலும் மாணவர்கள் பங்கேற்கலாம். இப்பயிற்சியானது மாணவர்களின் பணித்திறன், வேலைவாய்ப்புக்கான திறனை மேம்படுத்திக்கொள்வதற்காக அளிக்கப்பட உள்ளது. 

ஸ்ரீ இராமகிருஷ்ணா தொழில்நுட்பக் கல்லூரி வளாகத்தில் நடைபெறவுள்ள இப்பயிற்சியில், வேலைவாய்ப்பிற்கான தங்களது விவரங்கள் குறித்த அறிக்கை தயாரிப்பது, மாறுபட்ட சிந்தனை ஊக்குவித்தல், குழு கலந்துரையாடல், அணியாக செயல்படுவது, மற்றும் தலைமை பண்புகள் வளர்ச்சி உள்ளிட்டவை குறித்து பயிற்சியளிக்கப்படவுள்ளது.

மத்திய அரசின் சார்பில் அகில இந்திய தொழில்நுட்ப கவுன்சிலின் உதவியுடன் கட்டப்பட்டுள்ள எஸ்ஆர்ஐடி கல்லூரியில் செயல்பட்டு வரும் அனுபவத்தின் மூலம் மேற்கொள்ளப்படும் பயிற்சி பிரிவால் இலவசமாக வழங்கப்படவுள்ளது. 

இதில் பங்கேற்க விருப்பமுள்ள மாணவர்கள் இணையதள தேர்வின் மூலம் தேர்வு செய்யப்படவுள்ளனர். இதில், பங்குபெரும் மாணவர்களுக்கு பயிற்சிக்கான உபகரணங்களும், சான்றிதழ்களும் வழங்கப்படும். மேலும், வெளியூர்களில் இருந்து வரும் மாணவர்களுக்கு தங்கும் இடமும் வழங்கப்படவுள்ளது.

இப்பயிற்சிக்கு தங்களது கல்லூரி மாணவர்களை அணுப்ப விருப்பமுள்ள கல்லூரி பேராசிரியர்கள், எஸ்ஆர்ஐடி கல்லூரி பேராசிரியர்களான பி.சியாம்சுந்தர்- 9894146967 மற்றும் தீபா சி.குமார்- 8870653740 ஆகியோரை தொடர்புகொள்ளலாம்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...