ஆர்.கே.நகர் தொகுதியில் போட்டியிடுவது தொடர்பாக உயர்மட்டக்குழுவுடன் ஆலோசனை நடத்தி சசிகலா முடிவு செய்வார் - அமைச்சர் எஸ்.பி.வேலுமணி


ஆர்.கே.நகர் தொகுதி இடைத்தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக உயர்மட்டக்குழுவுடன் ஆலோசனை நடத்தி சசிகலா முடிவு செய்வார் என தமிழக நகராட்சி மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தெரிவித்துள்ளார்.

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் 30-வது நாள் நினைவு தினத்தை முன்னிட்டு தமிழகம் முழுவதும் அதிமுக-வினர் அஞ்சலி ஊர்வலங்களை நடத்தி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக கோவை அதிமுக அணி சார்பில் ஆத்துபாலத்தில் இருந்து குறிச்சி வரை மவுன அஞ்சலி ஊர்வலம் நடைபெற்றது.

தொடர்ந்து குறிச்சியில் ஜெயலலிதாவின் உருவப்படத்திற்கு மலர் அஞ்சலி செலுத்திய அதிமுகவினர், கட்சி தலைமைக்கு ஆதரவு தெரிவித்து உறுதிமொழி எடுத்துக்கொண்டனர். இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய தமிழக நகராட்சி மற்றும் நிர்வாகத்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, "ஒன்றரை கோடி தொண்டர்களை கொண்ட அதிமுக தற்போது சட்டமன்றத்தில் தனிப்பெருன்பான்மையுடன் உள்ளதாகவும், இதனால் மத்திய அரசு தமிழக அரசை அச்சுறுத்தி விட முடியாது எனவும் தெரிவித்தார்.

ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா போட்டியிடுவாரா என்ற செய்தியாளரின் கேள்விக்கு பதிலளித்த அவர், மூத்த நிர்வாகிகளை கொண்ட கட்சியின் உயர்மட்டக்குழுவுடன் ஆலோசனை நடத்தி தேர்தலில் போட்டியிடுவது தொடர்பாக சசிகலா முடிவு செய்வார் என அமைச்சர் வேலுமணி தெரிவித்தார். 

இந்த மவுன அஞ்சலி ஊர்வலத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட அதிமுகவினர் கலந்து கொண்டனர்.

Newsletter

மத்திய அரசின் அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ தொழில் சங்கங்கள் வரவேற்பு

கோவையில் மத்திய அரசு அறிவித்துள்ள அவசரகால கடன் உத்தரவாத திட்டம் 5.2-ஐ பல்வேறு தொழில் சங்கங்கள் வரவேற்றுள்ளன. இத்திட்டம்...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

விமான எரிபொருள் விலை உயர்வு: கோவை விமான நிலையத்தில் பயணிகள் கட்டணங்களில் பெரிய மாற்றம் இல்லை

ஈரான்-இஸ்ரேல் போர் காரணமாக சர்வதேசத்தில் விமான எரிபொருள் விலை உயர்ந்துள்ள நிலையில், கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிக...

ராமநாதபுரத்தில் மூதாட்டியை கொலை செய்து நகை கொள்ளை

கோவை ராமநாதபுரம் அடுக்குமாடியில் தனியாக வசித்த 69 வயது கோமதியை கழுத்தை நெரித்துக் கொலை செய்து தங்க நகைகள் கொள்ளையடித்த த...

கோவை மாவட்டத்தில் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களிப்பு

கோவை மாவட்டத்தின் 10 சட்டமன்ற தொகுதிகளில் நடந்த தேர்தலில் மொத்தம் 11,674 வாக்காளர்கள் NOTA-வுக்கு வாக்களித்துள்ளனர். கவு...

காரமடை ரயில் நிலைய விரிவாக்கப் பணிக்காக தோலம்பாளையம் ரயில்வே கேட் காலவரையின்றி மூடல்

காரமடை ரயில் நிலைய விரிவாக்க பணிகள் மற்றும் புதிய பிளாட்பாரம் கட்டுமானத்திற்காக காரமடை - தோலம்பாளையம் இடையேயான ரயில்வே க...