பணவர்த்தக சேவை மின்னணு மற்றும் இணையதளத்தின் மூலம் எவ்வாறு செயல்படுகிறது என ஸ்ரீ கிருஷ்ணா கலைக் கல்லூரியில் கருத்தரங்கம்

கோவை குனியமுத்தூர் பகுதியில் செயல்பட்டு வரும் ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரியின் வணிகவியல் துறை சார்பில் தேசிய அளவிலான "பணவர்த்தக சேவை மின்னணு மற்றும் இணையதளத்தின் மூலம் எவ்வாறு செயல்படுத்துவது" என்ற தலைப்பில் கருத்தரங்கம் இன்று அக்கல்லூரி வளாகத்தில் நடைபெற்றது.



இரண்டு நாட்கள் நடைபெறும் இக்கருத்தரங்கினை அமெரிக்காவின் ஜார்ஜியா மாநிலத்தில் உள்ள கிளைய்ட்டான் மாநில பல்கலைக் கழகத்தின் மேலாண்மைத் துறையின் தலைவர் முனைவர் அவிநந்தன் முகர்ஜி சிறப்பு விருந்தினராக பங்கேற்று சிறப்புரையாற்றி துவக்கி வைத்தார்.

இக்கருத்தரங்கில் இணையதளம் மற்றும் மின்னணுவின் மூலம் பணபரிவர்த்தனை எவ்வாறு சிறப்பாக செய்வது, இதன் முகியத்துவத்தினை பொதுமக்களுக்கும், நிறுவனங்களுக்கும் எடுத்துரைப்பது குறித்து 85 ஆய்வுக் கட்டுரைகளை இந்தியாவில் இருந்து பல்வேறு வர்த்தக நிபுணர்கள், ஆய்வாளர்கள், பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் சமர்ப்பித்திருந்தனர். இவையனைத்தும் புத்தக வடிவில் வெளியிடப்பட்டது.



மேலும், இந்நிகழ்ச்சியில் எலைகா வெல்த் மேனேஜ்மென்ட் நிறுவனம், மும்பை நிர்வாக இயக்குநர் மற்றும் முதன்மை நிர்வாக அலுவலர் கஜேந்திர கோத்தாரி சிறப்புரையாற்றினார்.

முன்னதாக, இக்கருத்தரங்கினை ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லூரி குழுமங்களின் நிர்வாக அறங்காவலர் எஸ்.மலர்விழி தலைமையேற்று துவக்கி வைத்தார். முதன்மை நிர்வாக அலுவலர் எஸ்.சுந்தரராமன் கருத்தரங்க அறிக்கையினை வாசித்தார். கல்லூரி முதல்வர் பி.பாபாஞானகுமார் வரவேற்புரையாற்றினார்.



வணிகவியல் துறைகளின் தலைவர் சுமதி, அன்புமலர், சந்தானலட்சுமி, விஜிமோல் உள்ளிட்டு பல்வேறு கல்லூரிகளின் பேராசிரியர்கள், மாணவ, மாணவியர்கள் உட்பட பலர் இந்த கருத்தரங்கத்தில் கலந்துகொண்டனர்.

Newsletter

தென்மேற்கு பருவமழை: கோவை மாவட்ட அணைகளில் நீர்வரத்து அதிகரிப்பு

கோவை மாவட்டத்தில் தென்மேற்கு பருவமழை காரணமாக ஆழியாறு, பரம்பிக்குளம், சோலையாறு உள்ளிட்ட அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள...

கோவை மாவட்டத்தில் நேற்று 181.70 மில்லி மீட்டர் மழை பதிவு

கோவை மாவட்டத்தில் நேற்று பெய்த மழையின் விவரங்களை பேரிடர் மேலாண்மை துறை வெளியிட்டுள்ளது. மேட்டுப்பாளையம் பகுதியில் அதிகபட...

ஆர்.எஸ்.புரத்தில் 350 CCTV கேமராக்கள் - குற்ற தடுப்புக்கு போலீஸ் அதிரடி

கோவை ஆர்.எஸ்.புரம் பகுதியில் குற்ற சம்பவங்களை தடுக்கவும், பொதுமக்களின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 350 கண்காணிப்பு கேமராக்...

பில்லூர்-3 குடிநீர் திட்டத்தில் பராமரிப்பு பணி: கோவை மாநகரில் 4 நாட்கள் குடிநீர் விநியோகம் நிறுத்தம்

கோவை மாநகராட்சியில் பவானி தடுப்பணையில் பராமரிப்பு பணிகள் மேற்கொள்ளப்படுவதால், இன்று முதல் 10-ந் தேதி வரை பில்லூர்-3 குடி...

“Tamil Nadu Voters Have Sent a Strong Message Against Cash-for-Votes,” Says Kadeswara Subramaniam

Hindu Munnani State President Kadeswara Subramaniam said the Tamil Nadu Assembly election results reflected the strength...

தேர்தலில் மக்கள் சரியான தீர்ப்பை அளித்துள்ளனர் - காடேஸ்வரா சுப்பிரமணியம்

தமிழக தேர்தல் முடிவுகள் மக்கள் சக்தியையும் ஜனநாயகத்தின் வலிமையையும் வெளிப்படுத்தியுள்ளதாகவும், தவெக தலைவர் விஜய்க்கு தனத...