தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் தமிழை பயிற்று மொழியாக அறிவிக்கக்கோரி கோவையில் தமிழ் இயக்கங்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம்


தமிழகத்தில் அனைத்து பள்ளிகளிலும் தமிழை பயிற்று மொழியாக அறிவிக்கக்கோரி, கோவையில் தமிழ் இயக்கங்கள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது.



வரும் கல்வியாண்டில் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துப் பள்ளிகளிலும் ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரை தமிழை பயிற்று மொழியாக அறிவிக்க வேண்டும், தொடக்கப்பள்ளி முதல் உயர்கல்வி வரை தமிழ்மொழியை பயிற்று மொழியாக்க வேண்டும், அரசுப்பணிகளில் தமிழ் வழியில் பயின்றவர்களுக்கு 100 சதவீதம் பணி வாய்ப்பு வழங்குதல் உள்ளிட்ட பத்து கோரிக்கைகளை வலியுறுத்தி, கோவை சிவானந்தா காலணி பகுதியில் பேரூர் ஆதினம் வளர் தமிழ் இயக்கம் மற்றும் பல்வேறு தமிழ் அமைப்புகள் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடைபெற்றது. 

இந்த போராட்டத்தில் பேரூர் ஆதின இளையப்பட்டம் மருதாச்சல அடிகாளர், தமிழ் அமைப்பினர்கள் மற்றும் மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர். தமிழகத்தில் 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட தொடக்கப்பள்ளிகளில் ஆங்கிலம் பயிற்று மொழியாக கற்பிக்கப்பட்டு வரும் நிலையை மாற்றி, அனைத்து தொடக்க பள்ளிகளிலும் தமிழ் பயிற்று மொழியாக அறிவிக்க வேண்டுமென போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர். 

மேலும் எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்ற தமிழக அரசின் கொள்கைப்படி உயர் நீதிமன்றம், ஆட்சித்துறை உள்ளிட்ட அனைத்து துறைகளிலும் தமிழ் மொழியை நடைமுறைக்கு கொண்டு வர வேண்டுமென வலியுறுத்திய அவர்கள், தமிழக அரசு உடனடியாக இக்கோரிக்கைகளை நடைமுறைப்படுத்தவில்லை எனில் தமிழறிஞர்கள் சாகும் வரை உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட உள்ளதாக தெரிவித்தனர். 

Newsletter

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

கோவை விமான நிலைய பக்கவாட்டு நுழைவாயிலில் கண்காணிப்பு குறைபாடு: வெளிநபர்கள் நுழைவதாக குற்றச்சாட்டு

கோவை சர்வதேச விமான நிலையத்தின் பூங்கா நகர் பகுதி நுழைவாயிலில் போதிய பாதுகாப்பு கண்காணிப்பு இல்லாததால், வெளிநபர்கள் உள்ளே...

“ஒரே ஒரு கழிப்பறை; அதிலும் தண்ணீர் பிரச்சனை” - கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் நோயாளிகள் அவதி..!

கோவை அரசு மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் பெண்கள் கழிப்பறை செயல்பாட்டில் இல்லை எனவும், பயன்பாட்டில் உள்ள ஒரே கழிப்பறைய...

மின்கட்டண உயர்வால் நெருக்கடி: அமைச்சர் செங்கோட்டையனிடம் மனு அளித்த மறுசுழற்சி ஜவுளித் தொழில்கள் கூட்டமைப்பு..!

மின் கட்டண உயர்வு ஜவுளித் தொழில்துறைக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தி வருவதால், Demand Charges மற்றும் Fixed Charges...

கோவை தெலுங்கு வீதியில் 700 கிலோ குட்கா பறிமுதல்: ஒருவர் கைது..!

கோவை தெலுங்கு வீதியில் உள்ள கடையில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த 700 கிலோ தடை செய்யப்பட்ட குட்கா மற்றும் புகையிலை பொருட்களை...

கோவை அரசு மருத்துவமனை சிறுநீரக வார்டில் கழிப்பறை பராமரிப்பின்மை: நோயாளிகள் கடும் அவதி

கோவை அரசு பொது மருத்துவமனையின் சிறுநீரக வார்டில் கழிப்பறைகள் சுகாதாரமற்ற நிலையிலும், தண்ணீர் வசதி இன்றியும் உள்ளதாக நோயா...